ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி -முதுகுளத்தூர் சாலையில் உள்ள திருவரங்கம் கிராமத்தில் உள்ள 600 ஆண்டு பழமையான மிகப்பெரும் ரெங்கநாதர் ஆலயம் இருந்த இடத்தை ஶ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் சுவாமி பார்வையிட்டு அதனை புனர் நிர்மானம் செய்யுமாறு கிராம மக்களைக் கேட்டு கொண்டார். முதுகுளத்தூர் அருகே திருவரங்கத்தில் உள்ள ஸ்ரீ ரங்கநாதர் கோயிலில் வெள்ளிக்கிழமை ஜீயர் சுவாமிகள் உலக நலனுக்காக பிரார்த்தனை செய்தார். ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் வட்டம் திருவரங்கத்தில் அமைந்துள்ள தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ ரங்கநாதர் கோயிலில், கிராம மக்களுக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் சுவாமிகள் மங்களாசாசனம் செய்து வைத்தார். கோயிலில் உலக மக்கள் நலனுக்காக பிரார்த்தனை செய்யப்பட்டது. தமிழர் திருநாள் பொங்கலை முன்னிட்டு கிராம மக்களுக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் சுவாமிகள் ஆசி வழங்கினார். நிகழ்ச்சியில் ஸ்ரீவில்லிபுத்தூர் திருமலை நம்பிகள், திருவரங்கம் விஞ்சாமூர் சுதர்சன ஐயங்கார், ராமநாதபுரம் தேவஸ்தான பொறுப்பாளர் ஆடலரசன், சமூக ஆர்வலர் நம்பி நாராயணன், காளிகோயில் பொறுப்பாளர் சந்திரன் உள்பட கிராம மக்கள் இதில் கலந்து கொண்டனர். பின்னர், கிராம மக்கள் சனிக்கிழமை அன்று ஒன்றுதிரண்டு, இது குறித்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்தனர்.
[su_posts template=”templates/list-loop.php” posts_per_page=”5″ orderby=”comment_count”]
முதுகுளத்தூர் அருகே ஆலய புனர் நிர்மானம் மேற்கொள்ள ஆசி வழங்கிய ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர்
Published:

