ஸ்ரீவில்லிபுத்தூர் திரு ஆடிப்பூரம் உற்சவம் ஜூலை 24ல் கொடியேற்றத்துடன்துவக்கம்..

IMG 20220715 WA0164 - 2026
IMG 20220715 WA0163 - 2026

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் திரு ஆடிப்பூரம் உற்சவம் ஜூலை 24 அன்று கொடியேற்றத்துடன்  துவங்குகிறது.பிரசித்திபெற்ற ஆடிப்பூர திருதேரோட்டம் ஆகஸ்ட் 1 அன்று நடக்கிறது.‌

இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தன்று ஆண்டாள் தேரோட்டத் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக தேரோட்ட திருவிழா பொதுவெளியில் நடக்கவில்லை. கோயில் வளாகத்தில் தங்கத்தேர் இழுக்கும் வைபவம் மட்டுமே நடந்தது.

தற்போது வழக்கமான சூழல் துவங்கி உள்ளதால், இந்தாண்டு தேரோட்ட திருவிழாவை நடத்த கோயில் நிர்வாகம் ஏற்பாடுகளை செய்து வருகிறது. இதன்படி ஜூலை. 24 அன்று காலை 09:00 மணிக்குமேல் 10:00 மணிக்குள் வேத பாராயண முறைப்படி கொடியேற்றத்துடன் திருவிழா துவங்குகிறது.

முக்கிய விழாவாக ஜூலை 28 அன்று காலை 10:00 மணிக்கு பெரியாழ்வார் மங்களாசாசனம், இரவு 10:00 மணிக்கு ஐந்து கருடசேவை, ஜூலை 30 இரவு 07:00 மணிக்கு கிருஷ்ணன் கோயிலில் ஆண்டாள், ரெங்கமன்னார் சயன திருக்கோலம் நடக்கிறது.

ஆகஸ்ட் 1-இல் அதிகாலை மூலவர் ஸ்ரீஆண்டாள் ரெங்கமன்னாருக்கு திருமஞ்சன அபிஷேகம் அலங்காரம் பூஜை நடத்தி திருத்தேரில் ஸ்ரீஆண்டாள் ரெங்கமன்னார் எழுந்தருளி
காலை 09:05 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்து இழுத்தலும் நடக்கிறது.

இதனைத்தொடர்ந்து தேர் அலங்கார பணிகளை மேற்கொள்ள நாள் செய்யும் விழா ஆண்டாள் கோயிலுக்கு எதிரே உள்ள தேர் நிலையத்தில்  அண்மையில் நடைபெற்றது. இரண்டு ஆண்டுகளுக்குப் பின்பு தேரோட்டம் நடைபெறுவதால் தேருக்கு அருகே கோயில் அர்ச்சகர்கள் சிறப்பு  யாகங்களும், ஹோமங்களும் வளர்த்து அதன் பின்னர் சிறப்பு பூஜை செய்தனர்.  நாள் செய்யும் விழாவில் ஏராளமான பக்தர்கள் திரண்டு வந்து  பங்கேற்றனர்.


ஆகஸ்டு 1-ந் தேதி நடைபெற உள்ள ஆடிப்பூர திருவிழாவை முன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தேரை தயார்படுத்தும் பணி முழுவீச்சில் தொடங்கப்பட்டுள்ளது.

images 39 2 - 2026

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தேர் தமிழகத்தில் இரண்டாவது மிகப்பெரிய தேராகும்.ஆண்டுதோறும் ஆடிமாதம் ஆடிப்பூரத்தன்று இல் தேரில் ஸ்ரீஆண்டாள் ரெங்கமன்னார் பவனி வரும் காட்சியை காண தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வது வழக்கம்.இந்த ஆண்டு திருவிழா மிகவும் சிறப்பாக கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தக்கார் ரவிச்சந்திரன், நிர்வாக அதிகாரி முத்துராஜா ஆகியோர் தெரிவித்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 19 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஜூன் 18 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

Topics

பஞ்சாங்கம் ஜூன் 19 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஜூன் 18 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories