திருவண்ணாமலை கார்த்திகைத் தீபத் திருவிழா வரும் 24-ம் தேதி துவக்கம்..

images 38 1 - 2026

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகைத் தீபத் திருவிழா வரும் 24-ம் தேதி துவங்குகிறது

 ஐஜி தலைமையில் 5 டிஐஜிக்கள், 30 எஸ்பிக்கள் உட்பட 12,097 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். 26 தீயணைப்பு வாகனங்களுடன 600 தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அண்ணாமலையில் பாதிக்கப்பட கூடிய பகுதியான 23 இடங்களில், 150 வனத்துறை வீரர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

2,692 சிறப்பு பேருந்துகள் மூலம் 6,431 நடைகள் இயக்கப்படும். தற்காலிக பேருந்து நிலையங்களில் இருந்து கிரிவல பாதை இடையே 100 பேருந்துகள் இயக்கப்படும். திருவண்ணாமலைக்கு தற்போது 9 ரயில்கள் இயக்கப்படும் நிலையில், கூடுதலாக 14 ரயில்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 15 நிலையான மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட உள்ளன. 15 எண்ணிக்கையில் 108 ஆம்புலன்ஸ், 10 இரு சக்கர வாகன ஆம்புலன்ஸ் தயார் நிலையில் வைத்திருக்கப்பட உள்ளன.

images 45 1 - 2026
ஹட்
images 42 1 - 2026

திருவண்ணாமலை மகா தீப தரிசனத்தைக் காண அண்ணாமலை மீது ஏறும் 2,500 பக்தர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய அனுமதி சீட்டு வழங்க திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகைத் தீபத் திருவிழா வரும் 24-ம் தேதி தொடங்கி 17 நாட்கள் நடைபெற உள்ளன. தீபத் திருவிழாவை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறையினர் முன்னேற்பாடு பணிகளை செய்து வருகின்றனர். அதன்படி, பக்தர்களின் வருகை, அடிப்படை வசதிகள், பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்து முடிவெடுத்துள்ளனர்.

கார்த்திகைத் தீபத் திருவிழா நடைபெறும் நாளான டிசம்பர் 6-ம் தேதி மட்டும் 25 லட்சம் பக்தர்களும், மகா தேரோட்டத்தின்போது 5 லட்சம் பக்தர்கள் வரக்கூடும் என மாவட்ட நிர்வாகம் எதிர்பார்க்கிறது. நகரை இணைக்கும் 9 முக்கிய சாலைகளில் 13 தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன. இதில் 1,160 பேருந்துகளை நிறுத்தலாம். மேலும் 12,400 கார் உள்ளிட்ட வாகனங்களை நிறுத்தும் வகையில் 59 கார் நிறுத்தும் இடங்கள் அமைக்கப்பட உள்ளன. வாகன நிறுத்தும் இடங்களில் கட்டணம் வசூலிக்கப்படாது.

அண்ணாமலையார் கோயிலில் 169 கண்காணிப்பு கேமரா மற்றும் கிரிவல பாதையில் 97 கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணிக்கப்படும். 57 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்களும், 35 இடங்களில் மே ஐ ஹெல்ப் யூ பூத் அமைக்கப்பட உள்ளன. குழந்தைகளின் கைகளில் அடையாளத்துடன் கூடிய ரிஸ்ட் பேன்ட் கட்டப்படும். 158 இடங்களில் குடிநீர் வசதி மற்றும் 85 இடங்களில் கழிப்பறை வசதி செய்து கொடுக்கப்பட உள்ளன. குப்பைகளை அகற்ற 2,925 தூய்மை பணியாளர்களை ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

101 இடங்களில் அன்னதானம் வழங்க அனுமதி வழங்கப்பட உள்ளன. 14 கண்காணிப்புக் குழுக்கள் மூலம் உணவுகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட உள்ளன. கிரிவலத்தில் துணிப்பை எடுத்து வருபவர்களுக்கு குலுக்கல் முறையில் 4 தங்க நாணயங்கள், 72 வெள்ளி நாணயங்கள் பரிசாக வழங்கப்படும். பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக 9 சிறப்பு மையங்கள் மூலம் துணிப்பை வழங்கப்படும். டிசம்பர் 2-ம் தேதி முதல் 6-ம் தேதி வரை மாடு மற்றும் குதிரை சந்தை நடைபெற உள்ளன. தீபத் திருவிழா நடைபெறும் நாளான டிசம்பர் 6-ம் தேதியன்று, அண்ணாமலை மீது ஏறுவதற்கு 2,500 பக்தர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய அனுமதி சீட்டு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

Topics

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

Entertainment News

Popular Categories