Eng Vs Ind T20: தொடரை வென்ற இந்தியா!

eng vs ind t20 - 2026

இந்தியா-இங்கிலாந்து இரண்டாவது டி20 போட்டி – 9.07.2022
– K.V. பாலசுப்பிரமணியன் –

சௌத்தாம்ப்டனில் நடந்த முதல் டி20 போட்டியில் இந்திய அணி முதலில் விளையாடி எட்டு விக்கட் இழப்பிற்கு 198 ரன் எடுத்திருந்தது. ஆனால் அதன் பின்னர் விளையாட வந்த இங்கிலாந்து அணி 19.3 ஓவரில் 148 ரன்னுக்கு அனைத்து விக்கட்டுகளையும் இழந்து தோல்வியுற்றது. இத்தகைய நிலையில் இன்று பர்மிங்ஹாமில் இரண்டாவது டி20 போட்டி நடந்தது. இங்கிலாந்து அணித் தலைவர் ஜாஸ் பட்லர் டாஸ் வென்று இந்திய அணியை மட்டையாடச் சொன்னார்.

இங்கிலாந்து அணியில் இரண்டு மாற்றங்கள். டேவிட் வில்லி, ரிச்சர்ட் கிளீசன் இருவரும் டைமல் மில்ஸ், ரீஸ் டாப்லிக்குப் பதிலாக ஆடினர். 34 ஆண்டுகள் 219 நாள் வயதுடைய வில்லி இங்கிலாந்திற்காக இன்று முதன் முறை ஆடுகிறார். இந்திய அணியில் நான்கு மாற்றங்கள். விராட் கோலி, ரிஷப் பந்த், ரவீந்த்ர ஜதேஜா, ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் இன்று விளையாடினர். முதல் போட்டியில் வெற்றிபெற்ற அணியில் இருந்து இஷான் கிஷன், தீபக் ஹூடா, அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங் ஆகியோர் இன்று விளையாடவில்லை.

ALSO READ:  தமிழகத்தின் 13வது முதல் அமைச்சராகப் பதவியேற்றார் ஜோசப் விஜய்!  

முதலில் ஆடிய இந்திய அணியில் ரோஹித் ஷர்மாவுடன் கோலி தொடக்க வீரராக இறங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ரிஷப் பந்த் தொடக்க வீரராக வந்தார். ரோஹித்தும் (20 பந்துகள், 31 ரன்) பந்த்தும் (15 பந்துகள், 26 ரன்) தடாலடி தொடக்கம் தந்தனர். விராட் கோலி மூன்று பந்துகள் விளையாடி 1 ரன் எடுத்தார்.

அதன் பின்னர் விளையாட வந்த சூர்யகுமார் யாதவ் (11 பந்துகள் 15 ரன்), ஹார்திக் பாண்ட்யா (15 பந்துகள் 12 ரன்), தினேஷ் கார்த்திக் (17 பந்துகள் 12 ரன்), ஹர்ஷல் படேல் (6 பந்துகள் 13 ரன்) வழக்கமான அதிரடி ஆட்டம் ஆடவில்லை. ஆனால் ஜதேஜா (29 பந்துகள், 46 ரன்) சிறப்பாக விளையாடினார். 20 ஓவர் முடிவில் இந்திய அணி எட்டு விக்கட் இழப்பிற்கு 170 ரன் எடுத்திருந்தது. ரிச்சர்ட் கிளீசன் 3 விக்கட்டுகளையும் கிரிஸ் ஜோர்டன் 4 விக்கட்டுகளையும் வீழ்த்தினர்.

அதன் பின்னர் ஆடவந்த இங்கிலாந்து அணிக்கு முதல் ஓவர் முதல் பந்தில் அதிர்ச்சி காத்திருந்தது. ஜேசன் ராய் புவனேஷ் குமார் பந்தில் ஆட்டமிழந்தார். மூன்றாவது ஓவரில் பட்லர் ஆட்டமிழந்தார். மொயின் அலி (21 பந்துகள், 31 ரன்), டேவிட் வில்லி (22 பந்துகள், 33 ரன்) ஆகிய இருவரைத்தவிர அனைத்து பேட்டர்களும் சொதப்பினார்கள்.

ALSO READ:  மாநில ஆளுநரின் அதிகாரங்களும், ஆட்சிப் பொறுப்பு ஒப்படைப்பும்!

புவனேஷ் குமார் 3 விக்கட், பும்ரா, சாஹல் தலா 2 விக்கட், ஹார்திக் பாண்ட்யா, ஹர்ஷல் படேல் தலா ஒரு விக்கட் எடுத்தனர். 17 ஓவருக்குள் இங்கிலாந்து அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 121 ரன் மட்டுமே எடுத்தது. இந்திய அணி 49 ரன் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இத்துடன் டி20 தொடரை இந்திய அணி கைப்பற்றியுள்ளது. நாளை மூன்றாவது டி20 போட்டி நடைபெறுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

Topics

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Entertainment News

Popular Categories