IND Vs ENG T20: 2வது போட்டியிலும் இந்திய அணி த்ரில் வெற்றி

eng vs ind t20 2025 - 2026

இந்தியா இங்கிலாந்து இரண்டாவது டி-20 ஆட்டம்- சென்னை-25 ஜனவரி 2025

இரண்டாவதிலும் வெற்றி

முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்

இங்கிலாந்து அணியை (20 ஓவர்களில் 165/9, ஜாஸ் பட்லர் 45, ப்ரைடன் கார்ஸ் 31, ஜேமி ஸ்மித் 22, ஹாரி ப்ரூக் 13, வருண் சக்கரவர்த்தி 2/38, அக்சர் படேல் 2/32, அர்ஷதீப் சிங், ஹார்திக் பாண்ட்யா, வாஷிங்க்டன் சுந்தர், அபிஷேக் ஷர்மா தலா 1 விக்கட்) இந்திய அணி (119.2 ஓவர்களில் 166/8, திலக் வர்மா ஆட்டமிழக்காமல் 72, வாஷிங்க்டன் சுந்தர் 26, ப்ரைடன் கார்ஸ் 3/29, ஆர்ச்சர், அதில் ரஷீத், மார்க் வுட், ஓவர்டன், லிவிங்க்ஸ்டோன் தலா 1) இரண்டு விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

பூவாதலையா வென்ற இந்திய அணியின் அணித்தலைவர் சூர்யகுமார் யாதவ் இங்கிலாந்து அணியை மட்டையாடப் பணித்தார். இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் பில் சால்ட் (4 ரன்) மற்றும் பென் டக்கட் (3 ரன்) இருவரும் விரைவில் ஆட்டமிழந்தனர். இங்கிலாந்து அணியின் அணித்தலைவர் ஜாஸ் பட்லர் (30 பந்துகளில் 45 ரன், 2 ஃபோர், 3 சிக்சர்) நன்றாக ஆடி பத்தாவது ஓவரில் ஆட்டமிழந்தார்.  ப்ரைடன் கார்ஸ் 17 பந்துகளில் 3 சிக்சர், 1 ஃபோருடன் 31 ரன் எடுத்தார். இவர்கள் இருவரைத் தவிர மற்றவர்கள் நிலைத்து ஆடவில்லை எனவே இங்கிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கட் இழப்பிற்கு 165 ரன் எடுத்திருந்தது.

இந்திய அணியின் தொடக்க வீரர்களான சஞ்சு சாம்சன் (7 பந்துகளில் 5 ரன்), அபிஷேக் ஷர்மா (6 பந்துகளில் 12 ரன்) சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அதன் பின்னர் சூர்யகுமார் யாதவ் (7 பந்துகளில் 12 ரன்), துருவ் ஜுரல் (5 பந்துகளில் 4 ரன்), ஹார்திக் பாண்ட்யா (6 பந்துகளில் 7 ரன்) ஆகியோரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இருப்பினும் திலக் வர்மா (55 பந்துகளில் 72 ரன்) வாஷிங்க்டன் சுந்தர் (19 பந்துகளில் 26 ரன்) ஆகியோரின் ஆட்டத்தால் இந்திய அணி 20ஆவது ஓவரில் 8 விக்கட் இழப்பிற்கு 166 ரன் எடுத்து வெற்றிபெற்றது.

திலக் வர்மா ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டார். இந்திய அணி 2-0 என்ற ஆட்டக்கணக்கில் முன்னிலையில் உள்ளது. அடுத்த ஆட்டம் 28 ஜனவரில் குஜராத் ராஜ்கோட்டில் நடைபெறும். 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories