IND Vs ENG T20: தொடரை வென்ற இந்திய அணி!

eng vs ind t20 2025 - 2026

இந்தியா இங்கிலாந்து நான்காவது டி-20 ஆட்டம்- புனே-31 ஜனவரி 2025

இந்திய அணி தொடரை வென்றது

முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்

இந்திய அணி (20 ஓவர்களில் 181/9, ஷிவம் துபே 53, ஹார்திக் பாண்ட்யா 53, ரிங்கு சிங் 30, அபிஷேக் ஷர்மா 29, மகமூத் 3/35, ஓவர்டன் 2/32, கார்சே, அதில் ரஷீத் தலா 1 விக்கட்) இங்கிலாந்து அணியை (19.4 ஓவர்களில் 166, ஹாரி ப்ரூக் 51, பென் டக்கட் 39, பில் சால்ட் 23, ஓவர்டன் 19, ஆர்ச்சர் 10, ரவி இஷ்னோய் 3/28, ஹர்ஷித் ராணா 3/33, வருண் 2/28, அர்ஷதீப் சிங், அக்சர் படேல் தலா 1 விக்கட்) 15 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

          பூவாதலையா வென்ற இங்கிலாந்து அணியின் அணித்தலைவர் ஜாஸ் பட்லர் இந்திய அணியை மட்டையாடப் பணித்தார். இன்றைய ஆட்டத்தில் முகமது ஷமிக்கு  பதிலாக அர்ஷதீப் சிங் ஆடினார். துருவ் ஜுரலுக்குப் பதிலாக ரிங்கு சிங் விளையாடினார்.

வாஷிங்க்டன் சுந்தருக்குப் பதிலாக ஷிவம் துபே விளையாடினார். இந்திய அணி பந்து வீச வரும்போது ஹர்ஷித் ராணா concussion substitute – காயமடைந்தவருக்குப் பதிலாக விளையாடுபவர் – ரூபத்தில் விளையாடி மூன்று விக்கட்டுகளும் எடுத்தார்.

          இந்திய அணியின் தொடக்கம் மிக மோசமாக இருந்தது. இரண்டாவது ஓவரின் முதல் பந்தில் சஞ்சு சாம்சன் (ஒரு ரன்), இரண்டாவது பந்தில் திலக் வர்மா (பூஜ்யம் ரன்), கடைசி பந்தில் சூர்யகுமார் யாதவ் (பூஜ்யம் ரன்) ஆகிய மூவரும் ஆட்டமிழந்து இந்திய அணி 12/3 என்ற ரன் கணக்கில் இருந்தது. இன்று இங்கிலாந்து அணி சார்பில் புதிதாக விளையாடிய மகமூத் மூன்று விக்கட்டுகளையும் தனது முதல் ஓவரிலேயே எடுத்தார்.

அதன் பின்னர் அபிஷேக் ஷர்மா (19 பந்துகளில் 29 ரன், 4 ஃபோர், 1 சிக்சர்) எட்டாவது ஓவரிலும் ரிங்கு சிங் (26 பந்துகளில் 30 ரன், 4 ஃபோர், ஒரு சிக்சர்) 11ஆவது ஓவரிலும் ஆட்டமிழந்தனர். அதன் பின்னர் ஷிவம் துபே (34 பந்துகளில் 53 ரன், 7 ஃபோர், 2 சிக்சர்) மற்றும் ஹார்திக் பாண்ட்யா (30 பந்துகளில் 53 ரன், 4 ஃபொர், 4 சிக்சர்) இருவரும் சிறப்பாக அடி இந்திய அணியை 20 ஓவர் முடிவில் 9 விக்கட் இழப்பிற்கு 181 ரன் எடுக்க வைத்தனர்.

          அதன் பின்னர் ஆட வந்த இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் பில் சால்ட் (23 ரன்) மற்றொரு தொடக்க வீரர் பென் டக்கட் (19 பந்துகளில் 39 ரன், 7 ஃபோர், 1 சிக்சர்) இருவரும் நல்ல தொடக்கம் தந்தனர். இந்த சமயத்தில் பந்து வீச வந்த இந்திய சுழல் பந்து வீச்சாளர்கள், அக்சர் படேல், ரவி பிஷ்னோய், வருண் சக்ரவர்த்தி, ஹர்ஷித் ராணா ஆகியோர் ரன் ரேட்டைக் கட்டுப்படுத்தி, விக்கட்டும் எடுத்தனர்.

அணித்தலைவர் ஜாஸ் பட்லர் (2 ரன்), ஹாரி ப்ரூக் (26 பந்துகளில் 51 ரன்), லிவிங்க்ஸ்டோன் (9 ரன்), ஜாக்கப் பெதல் (6 ரன்), ப்ரைடன் கார்ஸ் (பூஜ்யம் ரன்),  ஓவர்டன் (19 ரன்), ஆர்ச்சர் (பூஜ்யம் ரன்),  அதில் ரஷீத் (10ரன்), மகமூத் (1 ரன்) எடுத்தனர். 20 ஓவர் முடிவில் இங்கிலாந்து அணியால் 166 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது.

          ஆட்ட நாயகனாக ஷிவம் துபே அறிவிக்கப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி தொடரை 3-1 என்ற ஆட்டக் கணக்கில் வென்றுள்ளது. அடுத்த, ஐந்தாவது டி20  ஆட்டம் பிப்ரவரி 2ஆம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும்.   

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Topics

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

கும்பகோணத்தில் ஆண்டுதோறும் அட்சய திருதியை அன்று மிகச் சிறப்பாக நடைபெறும் திருவிழா 12 கருட சேவை ஆகும்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 21 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஐபிஎல் 2026: ரன் மழை விருந்து!

இருபத்தியெட்டாவது ஆட்டம் ராஜஸ்தான் vs கொல்கொத்தா – ஈடன் கார்டன்ஸ், கொல்கொத்தா - ஏப்ரல் 19

Entertainment News

Popular Categories