Ind Vs Eng ODI: தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி!

india vs england odi - 2026

இந்தியா-இங்கிலாந்து முதல் ஒருநாள் ஆட்டம் – நாக்பூர்
– 6 பிப்ரவரி 2025
தொடரை இந்திய அணி வெற்றியுடன் தொடங்கியது

முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்

இங்கிலாந்து அணியை (47.4 ஓவர்களில் 248, ஜாஸ் பட்லர் 52, பெதல் 51, பில் சால்ட் 43, பென் டக்கட் 32, ஆர்ச்சர் 21, ஹர்ஷித் ராணா 3/53, ஜதேஜா 3/26, ஷமி, அக்சர் படேல், குல்தீப் யாதவ் தலா ஒரு விக்கட்) இந்திய அணி (38.4 ஓவர்களில் 251/6, ஷுப்மன் கில் 87, ஷ்ரேயாஸ் ஐயர் 59, அக்சர் படேல் 52, மகமூத் 2/47, அதி ரஷீத் 2/49, ஆர்ச்சர், பெதல் தலா ஒரு விக்கட்) 4 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

பூவா தலையா வென்ற இங்கிலாந்து அணியின் அணித்தலைவர் ஜாஸ் பட்லர் முதலில் மட்டையாடத்தீர்மானித்தார். இன்றைய ஆட்டத்தில் இந்திய அணியில் விராட் கோலி ஆடவில்லை. அவருக்குப் பதிலாக ஜெய்ஸ்வால் ஆடினார். இங்கிலாந்து அணியின் தொடக்கம் மிகவும் பிரமாதமாக இருந்தது.

பவர்ப்ளே ஓவர்களான முதல் 10 ஓவர்களில் அந்த அணி 3 விக்கட் இழப்பிற்கு 77 ரன் எடுத்திருந்தது. பில் சால்ட் (26 பந்துகளில் 43 ரன், 5 ஃபோர், 3 சிக்சர்), பென் டக்கட் (29 பந்துகளில் 32 ரன், 6 ஃபோர்), ஜோ ரூட் (19 ரன்) ஆகிய மூவரும் சிறப்பாக ஆடினர். ஹாரி ப்ரூக் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அதன் பின்னர் ஆட வந்த ஜாஸ் பட்லர் (67 பந்துகளில் 52 ரன்), ஜேக்கப் பெதல் (64 பந்துகளில் 51 ரன்) இருவரும் சிறப்பாக ஆடியபோதும் இந்திய சுழல்பந்து வீச்சாளர்கள் ரன்ரேட்டைக் கட்டுப்படுத்தினர் மற்றும் விக்கட்டுகளும் எடுக்க ஆரம்பித்தனர்.

இன்று ஒருநாள் ஆட்டங்களில் முதன்முறையாகக் களம் இறங்கிய ஹர்ஷித் ராணா முதலில் அதிகம் ரன் கொடுத்தபோதும் மூன்று விக்கட்டுகள் வீழ்த்தினார். ரவீந்தர ஜதேஜா தன்னுடைய சுழல் ஜாலத்தில் மூன்று விக்கட்டுகள் எடுத்தார். இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் முழுமையாக ஆடமுடியாமல் 47.4 ஓவர்களில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 248 ரன்கள் எடுத்தது.

அதன் பின்னர் ஆடவந்த இந்திய அணியின் தொடக்க வீரர்கள் யசஸ்வீ ஜெய்ஸ்வால் (22 பந்துகளில் 15 ரன்) மற்றும் ரோஹித் ஷர்மா (7 பந்துகளில் 2 ரன்) இருவரும் சோபிக்கவில்லை. அதன் பின்னர் வந்த அனைத்து இந்திய வீரர்களும் ரன்ரேட் ஆறுக்குக் குறையாமல் ஆடினர்.

ஷுப்மன் கில் (96 பந்துகளில் 87 ரன், 14 ஃபோர்), ஷ்ரேயாஸ் ஐயர் (36 பந்துகளில் 59 ரன், 9 ஃபோர், 2 சிக்சர்) அக்சர் படேல் (47 பந்துகளில் 52 ரன், 6 ஃபோர், 1 சிக்சர்) என அனைவரும் சிறப்பாக ஆடினர். இறுதியில் 38.4 ஓவர்களில் 6 விக்கட் இழப்பிற்கு 251 ரன் எடுத்து இந்திய அணி வெற்றிபெற்றது. ரோஹித் ஷர்மா பேட்டிங்கில் சொதப்புவது கவலையளிக்கிறது.

ஷ்ரேயாஸ் ஐயரின் அதிரடி ஆட்டம் சிறப்பாக இருந்தது. ஆட்ட நாயகனாக ஷுப்மன் கில் அறிவிக்கப்பட்டார். அடுத்த ஒருநாள் ஆட்டம் கட்டாக்கில், இரவுபகல் ஆட்டமாக பிப்ரவரி 9ஆம் நாள் நடைபெறும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Entertainment News

Popular Categories