December 5, 2025, 3:00 PM
27.9 C
Chennai

IPL 2025: வல்லவனுக்கு வல்லவன்!

ipl 2025 games - 2025

ஐ.பி.எல் 2025 – ஹைதராபாத் vs லக்னோ – ஹைதராபாத் – 27.03.2025

வல்லவனுக்கு வல்லவன் இந்த இவ்வையத்தில் உண்டு

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

சன்ரைசர்ஸ் ஹைத்ராபாத் அணியை (190/9, ட்ராவிஸ் ஹெட் 47, அனிகெட் வர்மா 36, நிதீஷ் குமார் ரெட்டி 32, கிளாசன் 26, ஷர்துல் தாகூர் 4/34, ஆவேஷ் கான், திக்வேஷ் ரத்தி, ரவி பிஷ்னோய், பிரின்ஸ் யாதவ் தலா ஒரு விக்கட்) லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி (16.1 ஓவரில் 193/5, நிக்கோலஸ் பூரன் 70, மிட்சல் மார்ஷ் 52, அப்டுல் சமத் 22, பேட் கம்மின்ஸ் 2/29, ஷமி, சாம்பா, ஹர்ஷல் படேல் தலா ஒரு விக்கட்) 5 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

          பூவா தலையா வென்ற லக்னோ அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர் அபிஷேக ஷர்மா (6 பந்துகளில் 6 ரன்), அதற்கடுத்து வந்த இஷான் கிஷன் (பூஜ்யம் ரன்) இருவரும் விரைவில் ஆட்டமிழந்தனர். அதன் பின்னர் வந்த நிதீஷ் குமார் ரெட்டி (28 பந்துகளில் 32 ரன், 2 ஃபோர்) மற்றொரு தொடக்க வீரரான ட்ராவிஸ் ஹெட் உடன் இணைந்து (28 பந்துகளில் 47 ரன், 5 ஃபோர், 3 சிக்சர்) அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.

இவர்கள் இருவரைத் தவிர மற்றவர்களான ஹென்றி கிளாசன் (17 பந்துகளில் 26 ரன்,) அனிகெத் வர்மா (13 பந்துகளில் 36 ரன்) பாட் கம்மின்ஸ் (4 பந்துகளில் 18 ரன், 3 சிக்சர்), ஹர்ஷல் படேல்  (11 பந்துகளில் 12 ரன்)ஆகியோர் ஹைதராபாத் அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இருப்பினும் ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் ஒன்பது விக்கட்டுகள் இழப்பிற்கு 190 ரன் எடுத்தது.

          191 ரன் என்ற கடினமான வெற்றி இலக்கை அடைய இரண்டாவதாக ஆடவந்த லக்னோ அணியின் தொடக்க வீரர் ஐடன் மர்க்ரம் (1 ரன்) மோசமான தொடக்கம் தந்தார். அவருடன் களமிறங்கிய மிட்சல் மார்ஷ் (31 பந்துகளில் 52 ரன், 7 ஃபோர், 2 சிக்சர்) சிறப்பாக ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். அவருக்கு ஜோடியாக நிக்கோலஸ் பூரன் (26 பந்துகளில் 70 ரன்) மிக அற்புதமாக விளையாடினார்.

அவரது ஆட்டத்தால் லக்னோ அணியின் வெற்றி கிட்டதட்ட உறுதியாகி விட்டது. அதன் பின்னர் வந்த ரிஷப் பந்த் (15 பந்துகளில் 15 ரன்), ஆயுஷ் பதோனி (6 பந்துகளில் 6 ரன்), டேவிட் மில்லர் 7 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 13 ரன்), அப்துல் சமத் (8 பந்துகளில் 22 ரன், 2 ஃபோர், 2 சிக்சர்) ஆகியொர் 16.1 ஓவர்களிலேய வெற்றி இலக்கை அடைய உதவிசெய்தனர்.

          லக்னோ அணியின் பந்துவீச்சாளர், ஷர்துல் தாகூர் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

          இந்த வருட ஐபிஎல் ஆட்டங்கள் எல்லாம் அதிரடி மட்டையாளர்களின் ஆட்டமாக மாரிவிட்டது. பந்துவீச்சாளர்கள் மட்டையாளர்கள் சிக்சராக அடிப்பதைப் பார்த்துக்கொண்டு தலையைத் தொங்கப் போட்டவாறு செல்கின்றனர். நேற்று ஷமியின் பந்துகளை நிக்கோலஸ் பூரன் சிக்சர் அடிக்கும்போது பரிதாபமாக இருந்தது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories