தென்காசி மதுரை சாலையில் வேனும் காரும் மோதி விபத்து! 5 பேர் உயிரிழந்தனர்!

Published:

madhurai - 2026

ராஜபாளையம்-தென்காசி சாலையில் வேன், கார் மோதிக்கொண்ட விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.

ராஜபாளையம்-தென்காசி சாலையில் கடம்பன்குளம் கண்மாய் வளைவில் திங்கள்கிழமை நள்ளிரவு 2 மணியளவில் வேனும் காரும் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 5 பேர் உயிரிழந்தனர்.

மதுரை மேலூரில் இருந்து திருமண வீட்டார் சென்ற வேனும் குற்றாலத்திலிருந்து சிவகாசி நோக்கி வந்த காரும் மோதியதில், காரில் வந்த 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த ஒருவர் சிகிச்சைக்காக மதுரை செல்லும் வழியில் உயிரிழந்தார்.

சிவகாசியைச் சேர்ந்த சுடலைமணி (31), ஐயப்பன் (33), முத்துக்குமார் (31), அந்தோணிராஜ் (30), பிரபு (29) ஆகியோர் இந்த விபத்தில் உயிரிழந்தனர்

Related articles

Recent articles

spot_img