மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டியில் காரியாபட்டி மாணவன் சாதனை படைத்துள்ளார்.
மலேசியாவில் நடைபெற்ற, சர்வதேச சிலம்பம் ஷாம்பியன் போட்டியில், காரியாபட்டி பள்ளி மாணவன் பங்கேற்று சாதனை படைத்துள்ளார். மலேசியா பெஸ்ட் எம்பயர் சிலம்பம் அகாடமி சார்பாக, மலேசியா – இந்தியா சர்வதேச சிலம்பம் ஷாம்பியன்ஷிப் போட்டி கடந்த 1ந் தேதி முதல் 3 ந் தேதி வரை மலேசியாவில் நடைபெற்றது.
போட்டியில், இந்தியாவிலிருந்து பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர். தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்களும் பங்கேற்றனர். விருதுநகர் மாவட்டம், அருப்புக் கோட்டை ஜ.எஸ்.எப் சிலம்பம் அகாடமியில் பயிற்சி பெற்ற, காரியாபட்டியை சேர்ந்த பள்ளி மாணவன் முகுந்தன் சிலம்பாட்ட போட்டியில் பங்கேந்த தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சுருள் வாள் வீச்சில் -முதல் பரிசாக தங்க பதக்கமும், .இரட்டை கம்பு விளையாட்டில், இரண்டாம் பரிசு தங்க பதக்கமும், கம்பு சண்டையில் – மூன்றாம் பரிசையும் மாணவன் முகுந்தன் பெற்று சாதனை படைத்துள்ளார். மாணவர் முகுந்தனின் தந்தை வெங்கடேசன் காரியாபட்டி பேரூராட்சி அலுவலகத்தில் எலெக்ட்ரிசனாக பணிபுரிந்து வருகிறார்.
முகுந்தன், அருப்புக்கோட்டை செளடாம்பிகா பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். சாதனை படைத்த மாணவர் முகுந்தனுக்கு, காரியாட்டி பேரூராட்சித் தலைவர் மற்றும் அலுவலர்கள் , சர்வகட்சி பிரமுகர்கள் பள்ளி ஆசிரியர்கள், பொதுநல அமைப்பு பிரதிநிதிகள் பாராட்டு தெரிவித்தனர்.