கறுப்பைப் பணத்தை மீட்பேன் என்று கூறிவிட்டு மக்களின் தலையில் கல்லைப் போட்டவர் மோடி என்று பேசியுள்ளார் மு.க.ஸ்டாலின்.
இன்று கொல்கத்தாவில் நடைபெற்ற மம்தா பானர்ஜி கூட்டிய பேரணியில் பேசிய மு.க.ஸ்டாலின், கருப்பு பணத்தை மீட்பேன் என்று கூறி விட்டு, மக்களின் தலையில் கல்லை போட்டவர் மோடி என்று ஆவேசத்துடன் கூறினார்.
இதற்கு கமெண்ட் கொடுத்துள்ள எஸ்.வி.சேகர், க நாவுக்கு க நா ஆனாவுக்கு ஆனா இதெல்லாம் போய் ரொம்ப நாளாயிடிச்சு. என்று கூறியுள்ளார்.
இதற்கு பதில் கொடுத்துள்ள ஒருவர், கறுப்புப் பணத்தை மீட்கவில்லை என்றால், உங்களுக்கு அவர் நல்லதைத்தானே செய்திருக்கிறார் என்று கருத்து கூறியுள்ளார்.
அப்படி என்றால் உங்களுக்கு நல்தைத்தானே செய்துள்ளார்.
— கார்த்திகேயன் பான்டுரங்கன் (@NAAPAAKARTHIKEY) January 19, 2019
கள்ள ரயில் வந்து இன்று நீர் , நிலம் , ஆகாயம் என பஞ்சபூதங்களிலும் ஊழல் செய்து ஆசியாவில் 3 வது பெரிய பணக்கார குடும்பத்துக்கு கருப்பு பணம் பற்றி பேசினால் கோவம் வரத்தான் செய்யும்
— PG venkatram (@venkat_online) January 19, 2019
வீட்டிற்கு இரண்டு ஏக்கர் நிலம் தருகிறோம்(ஏழை எளியவர்களுக்கு) 2006 ம் ஆண்டு வாக்குறுதி கொடுத்த தி.மு.க. அப்பாவி மக்களின் பல லடசம் ஏக்கர் நிலங்களையும்,வீடுகளையும் ஆட்டையைப் போட்டதே அதைப் போலவா?
— K.Kamaraj. (@KKamara82882208) January 19, 2019
அன்றைய துணை முதல்வர் ஸ்டாலினும் இதில் அடக்கம்.