உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு, மதுரையில் பேரணி நடைபெற்றது.
மதுரை, புதுமண்டபம் அருகே, மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா, சுற்றுலாத் துறை சார்பாக, உலக சுற்றுலா தின, விழிப்புணர்வு பேரணியை, கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
இந்தப் பேரணி, மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே தொடங்கி, மதுரை திருமலை நாயக்கர் மஹாலில் முடிவடைந்தது. இந்தப் பேரணியில் மாணவ மாணவியர், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டார்கள்.
பலர் ஆர்வத்துடன் செல்பி எடுத்துக் கொண்டார்கள். இந்தப் பேரணியில், கலை நிகழ்ச்சிகளும், மக்களைக் கவரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டது.