
- ஆசிய விளையாட்டுப் போட்டி: நேபாளம் – மங்கோலியா அணிகளுக்கு இடையிலான டி20 போட்டியில் நேபாள் அணி 314 ரன்கள் குவித்து சாதனை படைத்தது.
- சர்வதேச டி20 போட்டிகளில் குறைந்த பந்துகளில் (9) அரைசதமடித்த வீரர் என்ற உலகசாதனையைப் படைத்தார் நேபாள வீரர் திபேந்திர சிங் ஐரி.
- சர்வதேச டி20 போட்டிகளில் குறைந்த பந்துகளில் (34) சதமடித்த வீரர் என்ற சாதனையைப் படைத்தார் நேபாள வீரர் குஷால் மல்லா.
ஆசிய விளையாட்டில் ஆண்கள் கிரிக்கெட் போட்டியில் நேபாள வீரர் திபேந்திர சிங் 9 பந்தில் 8 சிக்சருடன் அரைசதம் அடித்தார். இதன்மூலம் சர்வதேச டி-20 வரலாற்றில் அதிவேக அரைசதம் அடித்த வீரர் என்ற உலக சாதனையை படைத்தார்.
சீனாவின் ஹாங்சுவில் 19வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் ஆண்கள் கிரிக்கெட் போட்டியில், இன்று நடைபெற்ற நேபாளம் – மங்கோலியா அணிகளுக்கு இடையிலான 20 ஓவர் டி20 போட்டியில், மங்கோலியா அணி ‘டாஸ்’ வென்று பந்து வீசிய்து.
முதலில் பேட் செய்த நேபாள அணியில் தொடக்க வீரர்கள் குசால் புர்டெல் (19 ரன்கள்), ஆசிப் ஷேக் (16 ரன்கள்) ஓரளவு சுமாரான விளையாடினர். பிறகு களமிறங்கிய வீரர்கள் அடித்து ஆடினர். கேப்டன் ரோகித் பவுடல் 27 பந்தில் 6 சிக்சர் 2 பவுண்டரியுடன் 61 ரன்களில் வெளியேறினார்.
மறுபுறம் அதிரடியாக விளையாடிய குசால் மல்லா சதம் விளாசினார்.
பின்னர் வந்த திபேந்திர சிங் முதல் பந்தில் இருந்து சிக்சராக அடித்துத் தள்ளினார். முதல் ஆறு பந்துகளையும் சிக்சருக்கு பறக்கவிட்ட அவர் 7வது பந்தில் இரண்டு ரன்கள், அடுத்த இரு பந்துகளில் சிக்சர் என 9 பந்தில் அரைசதம் அடித்து உலக சாதனை படைத்தார்.
முன்னர் இந்தியாவின் யுவராஜ் சிங் 12 பந்தில் அரைசதம் அடித்ததே சர்வதேச ‘டி-20’ வரலாற்றில் அதிவேக அரைசதமாக இருந்தது. இந்த நிலையில், யுவராஜ் சாதனையை முறியடித்தார் திபேந்திர சிங்.
இறுதியில் நேபாள அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 314 ரன்கள் குவித்தது. இது ‘டி-20’ வரலாற்றில் ஒரு அணி குவித்த அதிகபட்ச ரன். இதற்கு முன் ஆப்கானிஸ்தான் அணி 278 ரன்கள் குவித்திருந்தது அதிக பட்சமாக இருந்தது.