December 6, 2025, 11:58 AM
26.8 C
Chennai

உலக சாதனை; 9 பந்தில் 8 சிக்ஸருடன் அரை சதம்! நேபாள வீரருக்கு குவியும் பாராட்டு!

nepal deependra singh - 2025
#image_title
  • ஆசிய விளையாட்டுப் போட்டி: நேபாளம் – மங்கோலியா அணிகளுக்கு இடையிலான டி20 போட்டியில் நேபாள் அணி 314 ரன்கள் குவித்து சாதனை படைத்தது.
  • சர்வதேச டி20 போட்டிகளில் குறைந்த பந்துகளில் (9) அரைசதமடித்த வீரர் என்ற உலகசாதனையைப் படைத்தார் நேபாள வீரர் திபேந்திர சிங் ஐரி.
  • சர்வதேச டி20 போட்டிகளில் குறைந்த பந்துகளில் (34) சதமடித்த வீரர் என்ற சாதனையைப் படைத்தார் நேபாள வீரர் குஷால் மல்லா.

ஆசிய விளையாட்டில் ஆண்கள் கிரிக்கெட் போட்டியில் நேபாள வீரர் திபேந்திர சிங் 9 பந்தில் 8 சிக்சருடன் அரைசதம் அடித்தார். இதன்மூலம் சர்வதேச டி-20 வரலாற்றில் அதிவேக அரைசதம் அடித்த வீரர் என்ற உலக சாதனையை படைத்தார்.

சீனாவின் ஹாங்சுவில் 19வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் ஆண்கள் கிரிக்கெட் போட்டியில், இன்று நடைபெற்ற நேபாளம் – மங்கோலியா அணிகளுக்கு இடையிலான 20 ஓவர் டி20 போட்டியில், மங்கோலியா அணி ‘டாஸ்’ வென்று பந்து வீசிய்து.

முதலில் பேட் செய்த நேபாள அணியில் தொடக்க வீரர்கள் குசால் புர்டெல் (19 ரன்கள்), ஆசிப் ஷேக் (16 ரன்கள்) ஓரளவு சுமாரான விளையாடினர். பிறகு களமிறங்கிய வீரர்கள் அடித்து ஆடினர். கேப்டன் ரோகித் பவுடல் 27 பந்தில் 6 சிக்சர் 2 பவுண்டரியுடன் 61 ரன்களில் வெளியேறினார்.
மறுபுறம் அதிரடியாக விளையாடிய குசால் மல்லா சதம் விளாசினார்.

பின்னர் வந்த திபேந்திர சிங் முதல் பந்தில் இருந்து சிக்சராக அடித்துத் தள்ளினார். முதல் ஆறு பந்துகளையும் சிக்சருக்கு பறக்கவிட்ட அவர் 7வது பந்தில் இரண்டு ரன்கள், அடுத்த இரு பந்துகளில் சிக்சர் என 9 பந்தில் அரைசதம் அடித்து உலக சாதனை படைத்தார்.

முன்னர் இந்தியாவின் யுவராஜ் சிங் 12 பந்தில் அரைசதம் அடித்ததே சர்வதேச ‘டி-20’ வரலாற்றில் அதிவேக அரைசதமாக இருந்தது. இந்த நிலையில், யுவராஜ் சாதனையை முறியடித்தார் திபேந்திர சிங்.

இறுதியில் நேபாள அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 314 ரன்கள் குவித்தது. இது ‘டி-20’ வரலாற்றில் ஒரு அணி குவித்த அதிகபட்ச ரன். இதற்கு முன் ஆப்கானிஸ்தான் அணி 278 ரன்கள் குவித்திருந்தது அதிக பட்சமாக இருந்தது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories