Homeவீடியோஈசன் வள்ளி கும்மி ஒயிலாட்ட சாதனை நிகழ்ச்சி!

ஈசன் வள்ளி கும்மி ஒயிலாட்ட சாதனை நிகழ்ச்சி!

-

கரூர் அருகே, வன்னியம்மன் கோவில், கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நடைபெற்ற, ஈசன் வள்ளி, கும்மி ஒயிலாட்ட நிகழ்ச்சியில், இரண்டாயிரத்து இருநூறுக்கும் மேற்பட்ட எண்ணிக்கையில், ஆண்கள், பெண்கள், சிறுவர், சிறுமியர் பங்கேற்று, சாதனை படைத்தார்கள்.

கரூர் மாவட்டம், மின்னாம்பள்ளி பகுதியில், குளக்கரை வன்னியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, ஊர் மைதானத்தில், ஈசன் வள்ளி, கும்மி மற்றும் கொங்கு ஒயிலாட்ட நிகழ்ச்சி, நடைபெற்றது. நிகழ்ச்சியை முன்னிட்டு, மைதானத்தில் அமைக்கப்பட்ட மேடையில், முருகனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.

கொங்கு ஒயிலாட்டக் குழு ஒருங்கிணைப்பாளர், பழனிவேலு தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், 2201 ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர், சிறுமியர், ஒரே வண்ணத்திலான பாரம்பரிய உடை அணிந்து, ஒயிலாட்டம் ஆடினர். 2201 பேர் கலந்து கொண்ட இந்த ஈசன் வள்ளி கும்மி நடன நிகழ்ச்சியை, ஆயிரக்கணக்கான ஊர் மக்கள் மற்றும் பக்தர்கள், கண்டு ரசித்தார்கள்.

இந்த நிகழ்ச்சியில், இரண்டாயிரத்து இருநூறுக்கும் மேற்பட்டோர் பங்கேற்று, புதிய உலக சாதனை படைத்ததற்கான சான்றிதழ், டிஸ்கவர் வேர்ல்டு ரெக்கார்டு அமைப்பின் சார்பில் வழங்கப்பட்டது.

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : நாகாலாந்து

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

- Advertisment -