நேபாளத்தில் இந்திய சுற்றுலா பயணிகள் 8 பேர் மர்ம மரணம்! வருத்தம் தெரிவித்து ட்விடிட்ட அமைச்சர் ஜெய்சங்கர்!

jeyasankar mini - 2026

நேபாளத்திற்கு சென்ற கேரளாவைச் சேர்ந்த 8 சுற்றுலா பயணிகள் ஓட்டல் அறையில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேபாளத்தின் டாமன் நகரில் ஓட்டல் ஒன்றில் கேரளாவை சேர்ந்த 8 பேர் தங்கிஇருந்தனர்.

டாமன் என்ற இடத்தில் உள்ள ரிசார்ட்டில் தங்கியிருந்த 8 பேரும் காலையில் அறையை விட்டு வெளியே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த ஓட்டல் ஊழியர்கள், மாற்று சாவி மூலம் அறையை திறந்து பார்த்தபோது 8 பேரும் சடலமாக கிடந்தது தெரியவந்துள்ளது.

இதுபற்றி மக்வான்பூர் நகர காவல் அதிகாரி சுஷில் சிங் ரத்தோர் கூறும்பொழுது, உயிரிழந்தவர்கள் 8 பேர் கோழிக்கோடு பகுதியை சேர்ந்த பிரவின் குமார் நாயர்(39), சரண்யா(34), ரஞ்சித் குமார்(39), இந்து ரஞ்சித்(34), ஸ்ரீபத்ரா(9), அபினவ் சூர்யா(9), அபி நாயர்(7) மற்றும் வைஷ்னவ் ரஞ்சித்(2) என்பது தெரியவந்துள்ளது. 

கேரளாவைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் நேற்றிரவு கேஸ் ஹீட்டரை பயன்படுத்தினர் என்றும், அதில் ஏற்பட்ட வாயு கசிவால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இவர்கள் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டனரா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது என கூறினர்.

இதனிடையே இது தொடர்பாக நேபாள நாட்டில் கேரள சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்த சம்பவத்திற்கு முதல்வர் பினராயி விஜயன் இரங்கல் தெரிவித்தார்.

மேலும் நேபாளத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை இந்தியா கொண்டு வருவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கேரள முதல்வரின் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இது தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தனது டிவிட்டர் பக்கத்தில் நேபாளத்தில் இந்தியாவை சேர்ந்த சுற்றுலா பயணிகள் 8 பேர் உயிரிழந்த சம்பவம் வேதனை அளிக்கிறது என கூறினார்.

மேலும் நேபாளத்திலுள்ள இந்திய தூதகர அதிகாரிகள் அனைத்து உதவிகளையும் செய்து வருகின்றனர் எனவும் கூறியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories