ஆக்லாந்து: தென்னாப்பிரிக்க அணி பெரும்பாலான உலகக் கோப்பை தொடரில் மிகச் சிறப்பாக செயல்பட்டும், கடைசிக் கட்டத்தில் ஏதாவது தவறு செய்து இறுதிப் போட்டிக்கு வராமல் போய் விடுகிறது. செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நியூசிலாந்துடனான அரையிறுதிப் போட்டியிலும் இவ்வாறே ஆனது. ஆனால், 43 ஓவர்களில் 298 ரன் என்ற இலக்கை நியூசிலாந்து அணி விரட்டிய விதம், தென்னாப்பிரிக்கா தனது பீல்டிங்கில் கோட்டை விட்டதையே காட்டுகிறது. உலகின் மிகச் சிறந்த பீல்டிங் அணி என்று பெயரெடுத்த தென்னாப்பிரிக்க அணியினர் கடைசிக் கட்டத்தில் தங்களது பலமான பீல்டிங்கில் எப்படி கோட்டை விட்டனர்? ஆச்சரியம்தான்! 32 வது ஓவரில் ஆண்டர்சனுக்கு வாய்ப்பளித்தனர். அப்போது கோரி ஆண்டர்சன் 33 ரன் எடுத்திருந்தார். எலியட் பாயிண்ட் திசையில் பந்தை அடித்திருந்தார். அப்போது அவர் தனது இணையை மீண்டும் ரன்னர் திசைக்கு திருப்பி அனுப்பினார். உலகின் மிகச் சிறந்த பீல்டர் என்று பெயரெடுத்த தென்னாப்பிரிக்க கேப்டன் டி விலியர்ஸ் பந்தை எடுத்து எறிந்த விதமும், அப்போது விக்கெட் கீப்பர் அதைப் பிடிக்காமல் பெயிலை தாகர்த்து விட்டு, ரன் அவுட் வாய்ப்பை கோட்டை விட்ட விதமும், ஆண்டர்ஸனை 58 ரன் அடிக்க உதவியது. எலியட்டும் ஆண்டர்சனும் சேர்ந்து 103 ரன் குவித்தனர். 41 வது ஓவரில் எலியட்டுக்கு வாய்ப்பளித்தனர். தென்னாப்பிரிக்க விக்கெட் கீப்பர் குண்டான் டி கோக், எலியட் ரன் எடுக்க ஓடி வந்தபோது, ரிலே ரொசோவ் வீசிய பந்தை கையில் சேகரிக்கத் தவறினார். அப்போது மிகவும் ரிஸ்க் எடுத்து இரண்டாவது ரன் ஓடினார் எலியட். அந்த வாய்ப்பை வீணடித்ததன் மூலம், எலியட் 66 ரன்னில் ஆட்டம் இழந்திருந்தால் நியூசிலாந்து 272க்கு 6 விக்கெட்டில் இருந்திருக்கும். 42 வது ஓவரில் எலியட் கேட்ச் வாய்ப்பு நழுவியது. தென்னாப்பிரிக்காவில் பிறந்த எலியட், 75 பந்தில் 84 ரன் எடுத்து அசத்தினார். முன்னதாக மார்னெ மோர்கல் வீசிய பந்தை பேட்டில் எட்ஜ் கொடுத்து கேட்ச் ஆகும் வாய்ப்பு ஏற்பட்டது. அப்போது, மாற்று வீரராக களத்தில் இருந்த பர்ஹன் பெஹர்டியன், டுமினி இருவரும் முட்டி மோதி, நல்ல கேட்ச் வாய்ப்பை நழுவ விட்டனர். அந்தக் கேட்ச் பிடிக்கப் பட்டிருந்தால், நியூசிலாந்து 284 ரன்னில் நின்றிருக்கும். 14 ரன் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா வென்றிருக்கும்.
நியூசிலாந்துடனான மோதலில் தென்னாப்பிரிக்கா செய்த முக்கிய 3 தவறுகள்!
Popular Categories


