பாகிஸ்தானின் அணு ஆயுதங்கள் குறித்து உலகம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்: இங்கிலாந்து

Published:

வாஷிங்டன்: பாகிஸ்தானில் உள்ள அணு ஆயுதங்கள் குறித்து உலக நாடுகள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என இங்கிலாந்தின் முன்னாள் பாதுகாப்புத்துறை செயலர் லியம்பாக்ஸ் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அவர் … பாகிஸ்தான் வசம் தற்போது 120க்கும் மேற்பட்ட அணு ஆயுதங்கள் உள்ளன. ஒவ்வோர் ஆண்டும் சுமார் 24 அணு ஆயுதங்கள் தயாரிக்கும் திறன் கொண்ட அணு உலைகள் அங்கே செயல்படத் துவங்கியுள்ளது. ஆனால் தற்போது ஈரான் நாட்டு அணு ஆற்றல் திட்டம் குறித்து மட்டுமே உலகம் பேசி வருகிறது. உலகில் உள்ள அனைத்து நாடுகளும் தங்களின் எதிரி நாடுகளிடம் அரசியல் ரீதியாகவே தொடர்பு கொண்டுள்ளன. ஆனால் பாகிஸ்தானைப் பொறுத்தவரை, நிர்வாகத்துக்குப் பொறுப்பானவர்கள் அரசியல்வாதிகளா, ராணுவமா, உளவுத்துறையா என்பது தெரியாமல் அனைவரிடமும் தொடர்பு கொள்ள வேண்டிய நிலையில் உள்ளது. அரசியல் நிலைத்தன்மை இல்லாத பாகிஸ்தானில் அணு ஆயுதங்கள் பயங்கரவாதிகள் கைகளில் போய்விடும் அச்சம் காணப்படுகிறது… என்று பேசினார்.

ALSO READ:  FIFA 2026: இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்தை புரட்டி எடுத்த அர்ஜெண்டைனா!

Related articles

Recent articles

spot_img