துருக்கி, சிரியாவில் மூன்று முறை  நிலநடுக்கம்-2,500 பேர் பலி..

1130729 afp 2 - 2026

துருக்கி மற்றும் சிரியாவில் திங்கள்கிழமை மூன்று முறை ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் தற்போது நிலவரப்படி உயிரிழந்தோர் எண்ணிக்கை 2500ஆக அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது

துருக்கி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இன்று ஒரே நாளில் மூன்று முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. முறையே 7.8, 7.5, 6.0 என்ற ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன. இந்த நிலநடுக்கத்தில் துருக்கி மற்றும் சிரியாவைச் சுற்றியுள்ள ஏராளமான கட்டடங்கள் சேதமடைந்தன. கட்டடங்கள் இடிந்து விழுந்ததில் ஏற்பட்ட இடிபாடுகளில் பலர் சிக்கியுள்ளனர். இன்று அதிகாலையில் நிலநடுக்கம் ஏற்பட்டதால், பலர் இடிபாடுகளில் சிக்கியுள்ளதாகவும், அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், துருக்கி அதிபர் எர்டோகன் தெரிவித்துள்ளார். 

மேலும் கடந்த 1939ஆம் ஆண்டுக்கு பிறகு ஏற்பட்ட மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் இது என்றும் அவர் குறிப்பிட்டார். மோப்ப நாய் உதவியுடன் தேசிய பேரிடர் மீட்புப் படையைச் சேர்ந்த வீரர்கள் இடிபாடுகளில் சிக்கியவர்களைத் தேடி மீட்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். அதற்குத் தேவையான கருவிகளையும் தயார் நிலையில் வைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

துருக்கி மற்றும் சிரிய மக்களுக்கான இந்தியா உதவும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இந்த பெருந்துயரத்திலிருந்து மீண்டு வருவதற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க இந்தியா தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Topics

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

Entertainment News

Popular Categories