கிறிஸ்துவ கடவுள் என்று ஒருவன் இருந்தால் நான் பதவி விலகுகிறேன்: அதிபர் சவால்

Phillipins President - 2026

மணிலா: கிறிஸ்துவ கடவுள் என்று ஒருவன் இருந்தால் நான் பதவி விலகுகிறேன் என்று பிலிப்பின்ஸ் நாட்டு அதிபர் சவால் விடுத்திருக்கிறார்.

பிலிபின்ஸ் அரசுக்கும் அந்நாட்டு கிறிஸ்துவ சர்ச்களுக்கும் இடையே ஏற்பட்டுள்ள கடுமையான பதற்ற நிலையை அடுத்து, அந்நாட்டு அதிபர் ரொட்ரிகோ டுடெர்ட் கிறிஸ்துவர்களிடம் அவர்களின் கடவுள் குறித்து சவால் விடுத்திருக்கிறார்.

டாவோ நகரின் லனங்க் எஸ்எம்எக்ஸ் கன்வென்ஸன் மையத்தில் நடந்த தேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வாரக் கொண்டாட்டத்தில் வெள்ளிக்கிழமை அன்று பேசிய அந்நாட்டு அதிபர் டுடெர்ட், கிறிஸ்துவ சர்ச்களுக்கு சவால் விடுத்துப் பேசினார். அப்போது அவர், உங்கள் கடவுள் என்று ஒருவர் இருப்பதாக காட்டுக் கத்தல் கத்தி சத்தம் போட்டுக் கொண்டு இருக்கிறீர்களே அப்படி ஒருவரை, சொர்க்கத்துக்கு அழைத்துச் செல்வார் என்று கூவுகிறீர்களே அப்படி ஒருவரை…. தனிப்பட்ட வகையில் நேரில் பார்த்ததாகவும் இருப்பதாகவும் கூறுகிறீர்களே அப்படி ஒருவரை… உண்மையில் உங்களில் யாராவது ஒருவர் பார்த்திருந்தால் அல்லது அப்படி ஒருவர் உண்மையில் இருந்தால்… நான் என் அதிபர் பதவியில் இருந்து இன்று இரவே விலகுகிறேன் என்று கூறியுள்ளார்.

இருப்பினும் தான் ’கடவுள் மிகப் பெரியவர்’ என்பதை நம்புவதாகவும், மதக் குழுக்களுக்கு இடையே மேற்கொள்ளும் செயல்பாடுகளையே கேள்வி கேட்பதாகவும் கூறியுள்ளார் டுடெர்ட்.

மேலும், நீங்கள் மக்களுக்கு உதவி செய்வதாகக் கூறுகிறீர்கள். அப்படி எனில் நாங்கள் ஏன் உங்களுக்கு பணம் பொருள் கொடுக்க வேண்டும்? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

தாங்கள் தரும் நிதி உதவிகளை ‘அரண்மனை’களை பராமரிக்கவே சர்ச்கள் பயன்படுத்துகின்றன என்று குற்றம் சாட்டினார் பிலிப்பின்ஸ் அதிபர்.

ஜூலை 9ம் தேதி நாளை பிலிப்பின்ஸ் கத்தோலிக் பிஷப்களின் மாநாட்டில் அதிபர் டுடெர்ட் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். அதில், தனது அரசுக்கும் மற்ற மதக்குழுக்களுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலை குறித்து பேசுவார் என்று கூறப்படுகிறது.

அண்மைக் காலமாகவே சர்ச்களின் நடவடிக்கை குறித்து பலத்த விமர்சனங்கள் எழுந்து வந்த நிலையில், கடந்த ஜூன் 24ம் தேதி அன்று டுடெர்ட் ‘முட்டாள் கடவுள்’ என்று கூறியிருந்தது மேலும் பதற்றத்தை அதிகரித்தது.

97% கிறிஸ்தவம் திணிக்கப்பட்ட பிலிப்பின்ஸில் மிஷனரிகளால் வறுமை, பாலியல் வன்கொடுமை, அராஜகம் இவை அதிகரித்துவிட்டதாக நாட்டின் அதிபர் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories