கிறிஸ்துவ கடவுள் என்று ஒருவன் இருந்தால் நான் பதவி விலகுகிறேன்: அதிபர் சவால்

Phillipins President - 2026

மணிலா: கிறிஸ்துவ கடவுள் என்று ஒருவன் இருந்தால் நான் பதவி விலகுகிறேன் என்று பிலிப்பின்ஸ் நாட்டு அதிபர் சவால் விடுத்திருக்கிறார்.

பிலிபின்ஸ் அரசுக்கும் அந்நாட்டு கிறிஸ்துவ சர்ச்களுக்கும் இடையே ஏற்பட்டுள்ள கடுமையான பதற்ற நிலையை அடுத்து, அந்நாட்டு அதிபர் ரொட்ரிகோ டுடெர்ட் கிறிஸ்துவர்களிடம் அவர்களின் கடவுள் குறித்து சவால் விடுத்திருக்கிறார்.

டாவோ நகரின் லனங்க் எஸ்எம்எக்ஸ் கன்வென்ஸன் மையத்தில் நடந்த தேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வாரக் கொண்டாட்டத்தில் வெள்ளிக்கிழமை அன்று பேசிய அந்நாட்டு அதிபர் டுடெர்ட், கிறிஸ்துவ சர்ச்களுக்கு சவால் விடுத்துப் பேசினார். அப்போது அவர், உங்கள் கடவுள் என்று ஒருவர் இருப்பதாக காட்டுக் கத்தல் கத்தி சத்தம் போட்டுக் கொண்டு இருக்கிறீர்களே அப்படி ஒருவரை, சொர்க்கத்துக்கு அழைத்துச் செல்வார் என்று கூவுகிறீர்களே அப்படி ஒருவரை…. தனிப்பட்ட வகையில் நேரில் பார்த்ததாகவும் இருப்பதாகவும் கூறுகிறீர்களே அப்படி ஒருவரை… உண்மையில் உங்களில் யாராவது ஒருவர் பார்த்திருந்தால் அல்லது அப்படி ஒருவர் உண்மையில் இருந்தால்… நான் என் அதிபர் பதவியில் இருந்து இன்று இரவே விலகுகிறேன் என்று கூறியுள்ளார்.

இருப்பினும் தான் ’கடவுள் மிகப் பெரியவர்’ என்பதை நம்புவதாகவும், மதக் குழுக்களுக்கு இடையே மேற்கொள்ளும் செயல்பாடுகளையே கேள்வி கேட்பதாகவும் கூறியுள்ளார் டுடெர்ட்.

ALSO READ:  ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க... நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

மேலும், நீங்கள் மக்களுக்கு உதவி செய்வதாகக் கூறுகிறீர்கள். அப்படி எனில் நாங்கள் ஏன் உங்களுக்கு பணம் பொருள் கொடுக்க வேண்டும்? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

தாங்கள் தரும் நிதி உதவிகளை ‘அரண்மனை’களை பராமரிக்கவே சர்ச்கள் பயன்படுத்துகின்றன என்று குற்றம் சாட்டினார் பிலிப்பின்ஸ் அதிபர்.

ஜூலை 9ம் தேதி நாளை பிலிப்பின்ஸ் கத்தோலிக் பிஷப்களின் மாநாட்டில் அதிபர் டுடெர்ட் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். அதில், தனது அரசுக்கும் மற்ற மதக்குழுக்களுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலை குறித்து பேசுவார் என்று கூறப்படுகிறது.

அண்மைக் காலமாகவே சர்ச்களின் நடவடிக்கை குறித்து பலத்த விமர்சனங்கள் எழுந்து வந்த நிலையில், கடந்த ஜூன் 24ம் தேதி அன்று டுடெர்ட் ‘முட்டாள் கடவுள்’ என்று கூறியிருந்தது மேலும் பதற்றத்தை அதிகரித்தது.

97% கிறிஸ்தவம் திணிக்கப்பட்ட பிலிப்பின்ஸில் மிஷனரிகளால் வறுமை, பாலியல் வன்கொடுமை, அராஜகம் இவை அதிகரித்துவிட்டதாக நாட்டின் அதிபர் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.

ALSO READ:  விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

Topics

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories