கும்பம் (பிலவ – மாசி மாத பலன்கள்)

masi month rasi palankal - 2026
karthigai month palangal

ப்லவ வருடம் மாசி மாத ராசி பலன்கள்
(12.2.2022 முதல் 13.03.2022 வரை)

ப்லவ வருடம் மாசி மாத ராசி பலன்கள் (12.02.2022 முதல் 13.03.2022 வரை) புஷ்யபக்ஷ அயனாம்ஸப்படி  மாசி மாதம் ஒரு நாள் முன்னதாக துவங்குகிறது

வருகிற 12.02.2022 நள்ளிரவு 12:23:6 மணிக்கு சூரியபகவான் மகர ராசியில் இருந்து  கும்ப ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். அவர் கும்ப ராசியில் 13.03.2022 இரவு 08:49:01 மணி வரை சஞ்சரிக்கிறார்.

இது புஷ்யபக்ஷ அயனாம்ஸத்தை ஒட்டி ஜகந்நாத் ஹோரா கணித பஞ்சாங்கப்படி கணிக்கப்பட்டது. 

வாக்கியப்படி 13.0.2022 அதிகாலை 04.13 மணிக்கு (உதயாதி 55.37 நாழிகைக்கு) கும்ப ராசிக்கு பெயர்ச்சிஆகிறார்.

ஒவ்வொரு ராசிக்குமான பலன்கள் புஷ்ய பக்ஷ அயனாம்ஸ பஞ்சாங்கப்படி கொடுக்கப்பட்டு இருக்கிறது.

உங்கள் பிறந்த லக்னம் தெரிந்தால் அந்த ராசிக்கான பலனையும் சேர்த்து பார்த்தல் சரியாக வரும்.

masi month chart - 2026

கோச்சார கிரஹ நிலைகள்

கிரஹ பாத சாரங்கள் : மாசி மாத பிறப்பின் போது

லக்னம் – விருச்சிகம் – விசாகம் – 4
சூரியன் –  கும்பம் – அவிட்டம் – 3
சந்திரன் – மிதுனம் – மிருகசீரிடம் – 4
செவ்வாய் – தனூர் – பூராடம் – 3
புதன் –  மகரம் – உத்திராடம் – 3
வியாழன் – கும்பம் –  சதயம் – 4
சுக்ரன் –  தனூர் –  பூராடம் – 3 
சனி – மகரம் – அவிட்டம் – 1
ராகு – ரிஷபம் – கிருத்திகை – 3
கேது – விருச்சிகம் – அனுஷம் – 1

கிரஹ வலிமைகள் :

மிக வலுவான கிரஹம் சுக்ரன்,  வலுவான கிரகம் :  குரு, சனி

சூரியன், புதன், ராகு,கேது, செவ்வாய் இவை மத்ய பலனை கொடுக்கும்

இவை மாதம் பிறக்கும் போது உள்ள நிலை. ஒவ்வொரு கிரஹமும் அந்த மாத்தத்தில் சஞ்சார நிலை கொண்டு வலிமை மாறுபடும்

இவற்றை கணக்கில் கொண்டு பலன் சொல்லப்படுகிறது. மேலும் ஜாதகர் பிறப்பு லக்னத்தை ஒட்டி பலன் சொல்லப்படுகிறது உதாரணமாக மேஷ ராசி ஜாதகர் கடக லக்னத்தில் பிறந்தால் கடகராசி பலனும் அவருக்கு பொருந்தும். உங்களது பிறந்த லக்னம் தெரிந்தால் அந்த ராசிக்கான பலனையும் சேர்த்து பார்த்து அறியவும்.

பொது பலன்:

பாரத தேசம் & தமிழகம் பொருத்தவரை:  
சுக்ரன் வலு அதனால் கலைத்துறை, வங்கி பணம் புழங்கும் இடம், ஆடை ஆபரண உற்பத்தி & விற்பனை, போன்றவை நல்ல முன்னேற்றம் பெறும். அன்னியர்களிடம் தேசத்தின் மதிப்பு கூடும். அரசர்களுக்குள் உண்டாகும் சண்டை மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தும். பொதுவாக விவசாயம், கல்வி துறைகள் சிரமத்துக்குள்ளாகும். விரோதிகளின் கை ஓங்கியது போல தெரியும், செவ்வாய் மகரத்தில் சஞ்சரிக்கும் 26.02.2022 முதல் ஓரளவு நன்மை உண்டாகும். தமிழகத்தில் குழப்பங்கள் நீங்கி ஓரளவு நன்மை உண்டாகும். மத்தியில் ஆளும் ஆட்சி தங்களது நோக்கங்களை நிறைவேற்றும் போது உலக அரங்கில் வரவேற்பை பெற்றாலும் பொருளாதார தேக்கத்தினால் மக்கள் விரக்தி அடைவர் நாட்டில் சலசலப்பு இருந்து கொண்டிருக்கும். பொதுவில் பெரிய ஆபத்துகள் இல்லை எனினும் மக்களிடம் பயம் கலந்த ஒரு நிலை இருந்து கொண்டிருக்கும்.

மாத ராசிபலன் கணிப்பு :
லக்ஷ்மீ ந்ருஸிம்ஹாச்சாரி, ஜோதிடர்,
ஸ்ரீஅக்ஷயா வேதிக் அஸ்ட்ரோ ரிசர்ச் பௌண்டேஷன்
D1-304, Block D1, Dhakshin Appartment
Siddharth Foundation, Iyyencheri Main Road,
Urappakkam – 603210, Kancheepuram Dist
Land Line : 044-35584922 | 8056207965 (வாட்ஸப்)
Email ID : mannargudirs1960@hotmail.com


கும்பம்🙁 அவிட்டம் 3,4 பாதங்கள், சதயம் 4 பாதம், பூரட்டாதி 1,2,3 பாதங்கள் முடிய):

ஜென்ம குரு சிறைவாசம் என்பர் சூரியனும் ராசியில் இருந்தால் நன்மை தராது என சொல்வர் ஆனால் இது எல்லோருக்கும் பொருந்தாது. இந்த மாதம் ராசியில் இருக்கும் குருவும், சூரியனும் கெடுதலை குறைக்கின்றனர் என சொல்லலாம் இவர்களின் வலிமை நன்றாக இருக்கு அதே போல் மாதம் ஆரம்பம் லாபத்தில் இருக்கும் சுக்ரன், செவ்வாயும் வருமானத்தை பெருக்கி பொருளாதாரம் நன்றாக இருக்கும்படி பார்த்து கொள்கின்றனர். இந்த மாதம் அதிக பலனை தரும் ஒரே கிரஹம் ராகு இவர் 3ம் இடத்துக்கு உண்டான பலனை முன்கூட்டியே தருவது பல துன்பங்களை குறைக்க உதவும். ஜீவன வகையில் உத்தியோகம் சொந்த தொழில் இவற்றில் பெரிய முன்னேற்றம் இல்லை என்றாலும் சிரமங்களும் இல்லை என சொல்லலாம். இந்த மாதம் சுமாராக த்தான் இருக்கும். முயற்சிகள் இழுபறிக்கு பின் நிறைவேறும். பிறப்பு ஜாதகம் நன்றாக இருந்தால் இது ஓரளவுக்கு நன்றாக இருக்கும். அவசரப்படாமலும் பெரியோர்கள் தகுந்தவர்களின் யோசனையை கேட்டு நடப்பது நன்மை தரும். எதிலும் ஒரு மந்த நிலை இருக்கும் அதே நேரம் இறை நம்பிக்கை மனோதிடம் அதிகரிக்க செய்யும். பொறுமை நிதானம் கொண்டு நடப்பது குடும்பத்தில், அலுவலகத்தில் பொது வெளியில் விட்டுக்கொடுத்து அனுசரித்து செல்வது இந்த மாதம் பரவாயில்லை என சொல்ல வைத்துவிடும். வெகு சுமார் மாதம்

அவிட்டம் 3,4 பாதங்கள் சந்திராஷ்டமம் : 18.02.2022 பிற்பகல் 02.37 மணி முதல் 19.02.2022 பிற்பகல் 02.48 மணி வரை

சதயம் 4 பாதங்கள் சந்திராஷ்டமம் : 19.02.22 பிற்பகல் 02.48 மணி முதல் 20.02.2022 பிற்பகல் 02.40 மணி வரை

பூரட்டாதி 1,2,3 பாதங்கள் சந்திராஷ்டமம் : 20.02.2022 பிற்பகல் 02.40 மணி முதல் 21.02.2022 பிற்பகல் 02.16 மணி வரை

வணங்கவேண்டிய தெய்வம் & நற்செயல்கள் வடுவூர் கோதண்டராமர் வழிபாடும் எங்கு ஆஞ்சநேயர் கோயில் இருந்தாலும் சனிக்கிழமைகளில் அவருக்கு விளக்கேற்றி அனுமன் சாலீசா படிப்பது ராமநாம ஜெபம் செய்வதும், முடிந்த அளவு ஏழை எளியோருக்கு அன்னதானம் செய்வதும் நன்மை தரும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories