January 21, 2025, 3:01 AM
23.2 C
Chennai

திராவிட மிரட்டல் அராஜகம்..! அதிர்ச்சியில் அரசு அதிகாரிகள்!

கரூர் செந்தில் பாலாஜி

“ஸ்டாலின் 11 மணிக்கு முதல்வரானால் 11:05 மணிக்கு நீங்கள் மாட்டு வண்டிகளில் மணல் அள்ளலாம். எந்த அதிகாரியும் தடுக்க முடியாது. தடுத்தால் அந்த அதிகாரி வேலையில் இருக்க முடியாது”
– செந்தில் பாலாஜி, கரூர் தொகுதி திமுக வேட்பாளர்

இன்று செந்தில் பாலாஜி கரூரில் தேர்தல் பிரச்சாரம் செய்யும் காணொளி காட்சியை கண்டு அதிர்ச்சியும் திகைப்பும் அடைந்தேன் !

கட்சி எல்லைகளை தாண்டி அது ஒரு முன்னாள் அமைச்சர் 2011 முதல் 2016 வரை அதிமுகவில் ஜெயலலிதா ஆட்சியில் போக்குவரத்து அமைச்சராக இருந்தவர் ! அவர் இப்போது திமுகவில் கரூரில் எம் எல் ஏ சீட்டுக்காக போட்டியிடுகிறார் !

அவர் சொல்கிறார் ஸ்டாலின் 11 மணிக்கு முதல்வராக பொறுப்பேற்றதும் 11 .05 க்கு மாட்டுவண்டியை எடுத்துக்கொண்டு நேராக போய் அமராவதி ஆற்று படுகையில் மணல் அள்ளலாமாம் ! எந்த அதிகாரியும் தடுக்க மாட்டார்களமாம் ! தடுத்தால் இவருக்கு போன் செய்தால் அந்த அதிகாரி அங்கு இருக்க மாட்டாராம் ! இவர் எல்லாம் மக்கள் தொண்டரா? சமூக விரோதியா ?

என்ன ஆணவம் திமிரான பேச்சு இது ! இவர்கள் ஆட்சிக்கு வந்தால் என்ன நடக்கும் என்பதற்கு முன்னோட்டமா இப்பேச்சு ? i திமுக அதிமுக இரு கட்சியினரும் பெரும் கோடீஸ்வரர்கள் ஆனது எப்படி என்று சொல்லாமல் சொல்கிறார் ! இவர் அதிமுகவில் இதே மாதிரி தான் இருந்திருப்பார் ! ஆனால் இவ்வாறு வெளிப்படையாக ஜெயலலிதாவிடம் இருந்தபோது பேசி இருந்தால் அவர் அடுத்த நாளில் காணாமல் போயிருப்பார் !

ALSO READ:  அமெரிக்க தேர்தல் அரசியல்; முந்துவது யார்?

இப்போது அவரை அடக்குவாரில்லை ! அவர் பணமும் தேவைப்படுகிறது ! இவரை தான் ஸ்டாலின் போன 2016 தேர்தலில் அன்புநாதன் என்பவர் வீட்டில் கோடி கோடி யாக கரூரில் பணம் கைப்பற்றப்பட்ட போது அந்த பணம் செந்தில் பாலாஜி பணம் என கூப்பாடு போட்டு சி பி ஐ விசாரணை வேண்டும் என்றார் ! இப்போது எல்லாம் சரியாகிவிட்டது ! யாருக்கும் வெட்கமில்லை !

  • சமூக வலைத்தள வைரல் பகிர்வு

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜன.21- செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் ஸ்ரீசுப்ரமணிய சுவாமி திருக்கோயில்!

கயிலாயத்தில் சிவபெருமான், பார்வதிக்கு பிரணவ மந்திர பொருளை உபதேசம் செய்தார். அப்போது அம்பிகையின் மடியில் இருந்த முருகன் மந்திரத்தை கேட்டுவிட்டார்.

சபரிமலையில்… காணிக்கை நாணயங்களை எண்ண, கைகொடுத்த ஏற்பாடுகள்!

சபரிமலை மண்டல மகரவிளக்கு மஹோத்சவத்திற்கு முந்தைய நாள், நாணயங்கள், ரூபாய் நோட்டுகள், தங்கம் மற்றும் வெள்ளி உள்ளிட்ட அனைத்தும் எண்ணப்பட்டு இன்று கருவூலம் பூட்டப்பட்டது.

சபரிமலை கோயில் நடை அடைப்பு!

இனி சபரிமலை ஐயப்பன் கோவில் மாசி மாத பூஜைக்காக நடை திறக்கப்படும் சபரிமலையில் இந்த ஆண்டு மகரஜோதி மகர விளக்கு

பஞ்சாங்கம் ஜன.20 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...