February 20, 2026, 5:00 AM
24.5 C
Chennai

பேச்சுரிமை தான் உண்டு; பொய் பேசி பிதற்றுவதற்கு உரிமையில்லை!

1854358 rahulgandhi1 1 - 2026

‘ தமிழக வாக்காளர் பட்டியலில் 6.5 லட்சம் பிஹாரிகளைச் சேர்க்க, பாஜக தூண்டுதலில் தேர்தல் கமிஷன் சதி செய்கிறது ‘ என்று எதிர்க்கட்சிகள் கூறுவது அபத்தமான குற்றச்சாட்டு.

‘ தேர்தல் கமிஷன் வாக்குகளைத் திருடுகிறது ‘ என்ற ராகுலின் குற்றச்சாட்டைப் பின்பற்றி, ப. சிதம்பரம், திமுக கூட்டணி கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் இப்படி புகார் கூறுகின்றனர்.

பிஹாரிலிருந்து வந்து இங்கே வேலை தேடிக்கொண்டு இங்கேயே செட்டில் ஆனவர்களை இம்மாநில வாக்காளர்களாகத்தான் கருத முடியும். அப்படி எத்தனை பேர் இருக்கிறார்கள் என்று தெரியவில்லை.

அவர்களுக்கு பிஹாரில் சொந்த வீடு இருந்தாலும், இங்கே வாக்குரிமை பெற தடையில்லை.

இந்திய வாக்காளர்கள் இந்தியாவில் எங்கும் வாக்களிக்கலாம். இரண்டு இடத்தில் வாக்களிக்க முடியாது . அவ்வளவுதான்.

தமிழக மக்களும் இதே போல பிற மாநிலங்களில் வாக்களிக்க முடியும்.

குடியுரிமை பெறாத அயல் நாட்டவர்களின் பெயர்களைச் சேர்க்க வேண்டும், இந்தியாவில் ஒரு மாநிலத்தைச் சேர்ந்தவர் இன்னொரு மாநில வாக்காளர் பட்டியலில் இடம் பெறக்கூடாது- என்றெல்லாம் இஷ்டம் போல பேசுவது முற்றிலும் அரசியலுக்காக மட்டுமே.

தமிழக வாக்காளர் பட்டியலில் பிற மாநிலத்தவர் இடம் பெறுவது, தமிழக வாக்காளர்களின் உரிமையைப் பாதிக்கும், இது மாநில உரிமைக்கு எதிரானது – என்ற வாதம் பொருளற்றது.

மாநில உரிமை என்ற கோஷமே ஒரு மாயை. எல்லா மாநிலங்களும் சமமே தவிர, எந்த மாநிலத்துக்கும் தனி உரிமைகள் இல்லை. அதனால்தான் காஷ்மீரின் சிறப்பு உரிமையும் பறிக்கப்பட்டது.

மாநில உரிமை என்பது சரியென்றால், மாவட்ட உரிமை, தாலுகா உரிமை, வார்டு உரிமைகளும் சரியாகி விடும்.

உண்மையில் முக்கியத்துவம் பெறுவது மக்கள் உரிமை மட்டுமே.

விவரம் தெரிந்தவர் என்று கருதப்படும் ப. சிதம்பரம் கூட வேண்டுமென்றே திருமாவளவன் வைகோ லெவலுக்கு இறங்கிப் பேசுவது பரிதாபத்திற்குரியது.

தேர்தல் மோசடி மூலம் மோடி பிரதமராகி விட்டார் என்ற ராகுலின் பேச்சு சிறுபிள்ளைத்தனமானது.

தேர்தல் பணியில் இருப்பவர்கள் அனைவரும் அரசு ஊழியர்கள். இப்படியொரு பெரும் மோசடி நடத்துவது சாத்தியமற்றது. அப்படி நடந்திருந்தால், தேர்தல் நடக்கும்போதே பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டிருக்கும்.

இந்திய பகுதியில் 2000 சதுர கிலோ மீட்டர் தூரம் சீனா ஆக்கிரமித்து விட்டது என்ற ராகுலின் பொறுப்பற்ற குற்றச்சாட்டை சுப்ரீம் கோர்ட்டும் கண்டித்துள்ளது.

தோல்வி பயம் வந்தால், முன் எச்சரிக்கையாக தாறுமாறாகப் பேசுவது அரசியல்வாதிகளுக்கே உரிய இலக்கணம்.

நம் நாட்டில் பேச்சுரிமை பிதற்றல் உரிமையாகி விட்டது.

  • — துக்ளக் சத்யா

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

T20 WC 2026: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள்!

இன்று 18.02.2026, டெல்லியில் காலை 1100 மணிக்கு தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றாது. எதிர்பார்த்தது போல தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.

Topics

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

T20 WC 2026: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள்!

இன்று 18.02.2026, டெல்லியில் காலை 1100 மணிக்கு தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றாது. எதிர்பார்த்தது போல தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.

பஞ்சாங்கம் – பிப்.18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

உணவே மருந்து! சர்க்கரை, இதய நோய்களில் இருந்து காத்துக் கொள்க!

இவ்வாறு உணவை சரிவிகிதமாக எடுத்து உடன் உடற்பயிற்சியையும் சேர்த்தால், நோயின்றி வாழ்வீர்கள் என்பது திண்ணம்.

ரம்ஜான்-க்காக கூடுதல் செலவு எனினும் தாராள நிதி ஒதுக்கீடு! கோவில்கள் என்றால் பாரபட்சம்!

இல்லை என்றால் வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை இந்து சமுதாயம் தனது இந்து ஓட்டு வங்கியின் மூலம் திமுக அரசுக்கு தக்க பதிலடி தந்தே தீரும்

Entertainment News

Popular Categories