December 6, 2025, 4:15 AM
24.9 C
Chennai

தற்காலத்துக்கு ஏற்ற சிறந்த மாற்றம்: புதிய கல்விக் கொள்கைக்கு தெய்வத் தமிழ்ச் சங்கம் வரவேற்பு!

new-education-policy
new-education-policy

தெய்வத் தமிழ்ச் சங்கம் அறக்கட்டளை சார்பில் அதன் தலைவர் எம்.டி.கோபாலரத்தினம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய கல்விக் கொள்கையை
வரவேற்பதாகவும் பாராட்டுவதாகவும் தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கையில், மத்திய அசின் புதிய கல்விக்கொள்கையில் தொடக்கக் கல்வி, தாய் மொழி கல்வியாக நடைமுறைப்படுத்துவதை தெய்வத் தமிழ்ச் சங்கம் வரவேற்கிறது.

தாய் மொழி வழிக் கல்வியே நம்மை உயர்த்தும், அதிலும் தொடக்கக் கல்வி தாய்மொழி வழியில் இருப்பது மிகவும் அவசியமானது. தாய்மொழியில் கல்வி பயிலும் பல நாடுகள் அதற்கு உதாரணமாக இருக்கின்றன. நமது தமிழ்நாட்டிலும் மேதகு அப்துல்கலாம் துவங்கி, தற்போது இஸ்ரோவின் தலைமைப் பதவியிலிருக்கும் சிவன் ஆகியோர் வரை பலரும் தாய்மொழி வழி கல்வியில் பயின்றவர்களே.

தாய் மொழியிலேயே நமது மூளை சிந்திக்கும் என அறிவியல் அறிஞர்கள் கூறுகின்றனர். தாய் மொழி வழி கல்வியால் மாணவர்களுக்குக் கல்வியில் ஆர்வம் பிறக்கும், இடைநிற்றல் முற்றிலும் இல்லாமல் போகும்.

`உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்’ என்ற பாரதியின் வாக்கிற்கு இணங்க, பள்ளிக் கல்வியோடு தொழிற் கல்வியும் அளிக்கும் திட்டம் இதில் அமைந்துள்ளது. தொழில் நுணுக்கம் பெறுவதால், மாணவ பருவத்திலேயே ஆராய்ச்சி கண்ணோட்டம் பெருமளவில் ஏற்படும்.

முதல் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு அனைவருக்கும் ஒரே மாதிரியான கல்வித் திட்டம், அதுவும் இலவசமாக அளிக்க பரிந்துரைத்திருப்பது வரவேற்கத்தக்கது. நமது நாட்டில் பலவகையான பள்ளி கல்வி வாரியங்கள் இருப்பது, பாரபட்சமானது. இது களையப்பட்டு கிராமங்கள் முதல் நகரங்கள் வரை ஒரே மாதிரியான கல்வி திட்டம் அமைக்கப்படுவது வரவேற்கத்தக்கது. இதனால், நாட்டில் எவ்விடம் சென்றாலும் கல்வியின் தரம், பாடத்திட்டம் ஒரே மாதிரியாக இருக்கும். இதனால், மாணவர்கள் குழப்பம் இல்லாமல் உயர்கல்வி பயில முடியும்.

நாடு சுதந்திரம் அடைந்து இதுவரை கல்வித் துறையில் முழுமையான மாற்றம் ஏற்படுத்தாமல் இருந்த குறையைப் போக்கி, தற்காலத்திற்கு ஏற்ப மாற்றியமைத்திருப்பதை தெய்வத் தமிழ்ச் சங்கம் சார்பில் வரவேற்கிறோம்… என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories