இன்னமும் இழுபறியில் தேமுதிக.,! இந்த வாய்ப்பும் போனால்.. மூன்றாவது அணிதான்!

vijayakanth piyush goyal - 2026

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் அதிமுக., தலைமயிலான கூட்டணியில் இடங்கள் தொடர்பாக தேமுதிக முக்கிய நிர்வாகிகள் அவசர ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை, கோயம்பேட்டில் உள்ள தேமுதிக., கட்சி தலைமை அலுவலகத்தில் சுதீஷ் தலைமையில் ஆலோசனை நடத்தப் பட்டு வருகிறது. மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் சந்திப்பைத் தொடர்ந்து, அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விவாதிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிமுக கூட்டணியில் 10 தொகுதிகளை தேமுதிக கேட்பதால், இழுபறி நிலை நீடிப்பதாகக் கூறப்படுகிறது. கள்ளக்குறிச்சி, கடலூர் தொகுதிகளை தேமுதிகவிற்கு கொடுக்க பாஜக வலியுறுத்துவதால் இழுபறி நீடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னதாக, கடந்த முறை தே.ஜ.கூட்டணியில் தேமுதிக போட்டியிட்டபோது அதிக தொகுதிகளில் நின்றதையும் தற்போது 10க்கும் குறையாமல் பெற வேண்டும் என்றும் பேச்சு நீடிக்கிறது. ஆனால், கடந்த முறை விஜயகாந்த் உடன் இருந்த பலர் இப்போது இல்லை என்பதும், கட்சி கரைந்து போய், விஜயகாந்த் என்ற ஒற்றை மனிதருக்கான செல்வாக்கை வைத்து உள்ளது என்றும் கூறப் படுகிறது.

ஆயினும், பாமக., பெற்ற தொகுதிகளைக் காட்டிலும் குறைவாகப் பெற தேமுதிக சம்மதம் தெரிவிக்கவில்லை. அடுத்து, மாநிலங்களவை உறுப்பினர் தொகுதியும் ஒன்று கேட்டிருந்தது என்றும் அது பாமக.,வுக்கு அளிக்கப் பட்டதால், தேமுதிக தரப்பு அதிர்ச்சி அடைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

நாற்பது தொகுதிகளில் தற்போது வரை பாஜக., பாமகவுக்கும் உதிரிக் கட்சிகளுக்கும் என 15 தொகுதிகள் சென்றாலும் 5 தொகுதிகள் மட்டுமே தேமுதிக.,வுக்கு ஒதுக்கும் நிலையில் அதிமுக., தரப்பு உள்ளது. அதிமுக., கடந்த முறை 37 தொகுதிகளில் வென்றது. தற்போது கூட்டணி என்பதால் பாதி இடங்களைக் குறைத்துக் கொண்டு, குறைந்த பட்சம் 20 தொகுதிகளிலாவது போட்டியிட வேண்டிய நிர்பந்தத்தில் அதிமுக., உள்ளது.

அதேபோல், திமுக., கூட்டணியில் காங்கிரஸுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்படும் என்ற பேச்சு எழுந்துள்ளது. எனில், திமுக.,வும் 20க்குக் குறையாமல் போட்டியிட வேண்டிய நிர்பந்தத்தில் உள்ளது. மதிமுக., விடுதலை சிறுத்தைகள், இரு கம்யூனிஸ்ட்கள், முஸ்லிம் கட்சிகள் ஆகியவற்றுக்கும் மீதமுள்ள தொகுதிகளில் ஒதுக்கியாக வேண்டும்.

ஏற்கெனவே திமுக., கூட்டணியில் பாமக.,வுக்கு 5 இடங்கள் வரை கொடுப்பதாகவும், அதனாலேயே காஞ்கிரஸுக்கு 10 தொகுதிகள் ஒதுக்க முடியாது என்றும் திமுக., கூறி வந்தது. அதன்படியே பாமக.,வுக்கு ஒதுக்கி வைத்திருந்த தொகுதிகள் எல்லாம் இப்போது காங்கிரஸுக்கு அளிக்க திமுக., முன் வந்துள்ளது. எனவே தேமுதிகவுக்கு திமுக., கூட்டணியில் இடம் அமையாது என்பதும், அது கேட்கும் தொகுதிகள் கிடைக்காது என்பதும் வெளிப்படையாகக் கூறப்பபடும் தகவல்கள்!

எனவே தேமுதிக,.வுக்கு  அடுத்த வாய்ப்பாக, மூன்றாவது அணிதான் முன்நிற்கும்! அதனை ஏற்கெனவே சட்டசபைத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியால் சூடுபட்ட விஜயகாந்த் இப்போது அதை விரும்புவாரா என்பது சந்தேகமே!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories