ஜூனியர் ட்ரம்ப்பும் ஜூனியர் நேருவும்

rahul gandhi - 2026

அமெரிக்காவில் இன்று ட்ரம்ப் எதிர்ப்பு மீடியாக்களினால் பெரிதாகப் பேசப் படும் விஷயம் ட்ரம்ப்பின் பையன் ரஷ்ய நாட்டுத் தூதரையும் ரஷ்ய நாட்டு வக்கீல் ஒருவரையும் ரகசியமாக சந்தித்த ஒரு விஷயம் பற்றியதுதான். ஜூனியர் நேரு செய்திருக்கும் விஷயத்தை விட அது நிறையவே வில்லங்கமில்லாத ஒரு விஷயம் தான். அதைப் பார்த்து விட்டு நேருவின் வாரிசுக்கு வரலாம்.

ட்ரம்ப் பையன் என்ன செய்தான்? அமெரிக்க தேர்தலின் பொழுது ரஷ்ய வக்கீல் ஒருவரையும் ரஷ்ய தூதரையும் தன் மச்சானையும் கூட்டிக் கொண்டு போய் தனியாக சந்தித்திருக்கிறான். ட்ரம்ப்பின் மருமகன் இப்பொழுது வெள்ளை மாளிகையின் அரசாங்க அதிகாரியும் கூட. அந்த வக்கீல் ஹிலரி பற்றி ஏதோ பலான மேட்டர் இருப்பதாகவும் அதைத் தருவதாகவும் சொன்னதினால் ட்ரம்ப் புள்ளையாண்டான் அங்கு போய் அவர்களை சந்தித்ததாக இப்பொழுது ஒத்துக் கொண்டுள்ளான். கூடவே அவன் மச்சானும் ஆமாம் நானும் பார்த்தேன் ஆனால் பதவியேற்பு அஃபிடவிட்டில் சொல்ல மறந்து போனேன் ஹி ஹி இப்ப சொல்றேன் என்கிறான்

அமெரிக்காவில் தேர்தல் நடக்கும் பொழுது அதற்கு எதிரான ஒரு தேசத்தின் ஆட்களை சந்தித்ததும் அவர்கள் மூலமாக பிரசாரம் செய்ய முனைந்ததும் தவறு என்று இன்று அமெரிக்காவில் டெமாக்ரட்டுகளும் ட்ரம்ப் எதிர்ப்பு மீடியாக்களூம் சில ரிபப்ளிக்கன் செனட்டர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள். அதாவது ஒரு எதிரி தேசத்தின் தூதரை எந்தக் காரணம் கொண்டும் ஜனாதிபதி வேட்ப்பாளரின் மகனும் மருமகனும் சந்தித்ததே தவறு என்கிறார்கள். இந்த விஷயம் எப்படியும் வெளியே வந்து விடப் போகும் தருணத்தில் முந்திக் கொண்டு ட்ரம்ப் ஜூனியர் இதை ஒத்துக் கொண்டிருக்கிறான். அதற்காக தன் மகனை உச்சி மோந்து பாராட்டியிருக்கிறார் ட்ரம்ப்.

நிற்க தேர்தல் நேரத்தில் எதிரி நாட்டு தூதரை ஜனாதிபதி வேட்ப்பாளரின் அதிகாரபூர்வ பிரதிநிதி சந்தித்ததே குற்றம் என்பது அமெரிக்க நிலைப்பாடு. ஆனால் இந்தியாவில் நடப்பது என்ன?

இந்தியா மீது சீனா போர் தொடுக்கும் சூழல் உள்ளது. இந்தியாவை காஷ்மீருக்குள் புகுந்து தாக்குவோம் என்றும் 1962 நினைவில் கொள்ளுங்கள் என்றும் சீனா எல்லையில் மிரட்டிக் கொண்டிருக்கிறது. அந்த மாதிரி மிகவும் அச்சுறுத்தல் உள்ள போர் மேகங்கள் சூழ்ந்த சூழலில் இந்தியாவின் ஒரு சாதாரண குடிமகன் கூட சீன நாட்டு தூதரகத்துக்குச் சென்று கொஞ்சிக் குலாவுவது ஒரு தேசத் துரோக குற்றமாகவே கருதப் பட்டிருக்க வேண்டும். இந்தியாவின் எதிர்க்கட்சியின் துணைத் தலைவராக இருப்பவர் இப்படி சீனா இந்தியாவை அழிப்பேன் என்று மிரட்டிக் கொண்டிருக்கும் ஒரு அபாயகரமான சூழலில் சீனத் தூதரகத்திற்கு சென்று அவர்களுடன் ரகசியமாக பேசி விட்டு வந்திருக்கிறார். பேசி விட்டு வந்தவர் சாதாரணமான ஆள் அல்ல இந்தியாவை அவர் அப்பா, பாட்டி, கொள்ளுத் தாத்தா, அம்மா என்று பரம்பரை பரம்பரையாக 65 வருடங்கள் பேண்ட பரம்பரை.

அவருக்கு இந்தியாவின் அத்தனை ரகசியங்களும் நிச்சயமாகத் தெரிந்திருக்கும். மன்மோகன் என்ற ஒரு டம்மியை வைத்துக் கொண்டு கடந்த பத்தாண்டுகள் இந்த இத்தாலி மாஃபியாதான் ஆண்டு வந்துள்ளது. இவர்களிடம் இன்னும் இத்தாலிய பாஸ்போர்ட்டும் குடியுரிமையும் உள்ளது. ஆக அப்படியாகப் பட்ட ஒருவர் இந்தியா போரை சந்திக்கும் ஒரு இக்கட்டான தருணத்தில் எதிரி நாட்டு தூதரை சந்தித்த விபரங்களை நாட்டு மக்கள் முன் வைத்திருக்க வேண்டும். அப்படி சென்றதே தவறு அப்படியே சென்றிருந்தாலும் என்ன பேசினார்கள் என்பது வெளிப்படையாக வைத்திருக்கப் பட வேண்டும்

ஆனால் நடந்தது என்ன? முதலில் ராக்கூழ் சீன தூதரத்துக்குச் செல்லவே இல்லை என்று காங்கிரஸ் கட்சி மறுத்து அப்படிச் சொல்பவர்களை இந்த்துவ பயங்கரவாதிகள் என்று திட்டியது. ஆனால் சீன தூதரகம் ராக்கூழ் வந்து போன ஃபோட்டோவைப் போட்டு விஷயம் வெளியே வந்தவுடன் அந்த அறிக்கையை நீக்கச் சொல்லி நீக்க வைத்திருக்கிறார்கள். விஷயம் வெளியே தெரிந்தவுடன் வேறு வழியில்லாமல் ஆமாம் சந்தித்தேன் இப்ப என்ன என்கிறார் தெனாவெட்டாக.

கேட்டால் அவருக்கு விஷயம் தெரிய வேண்டுமாம் அதனால் போனேன் என்கிறார். உனக்கு விஷயம் தெரிய வேண்டும் என்றால் நீ முதலில் வெளியுறவுத் துறைக்கு அல்லவா சென்றிருக்க வேண்டும்? சுஷ்மாவிடமோ அல்லது வெளியுறவு செயலரிடமோ அல்லவா கேட்டிருக்க வேண்டும். அவர்கள் சொன்ன பதில் திருப்தியாக இருந்திருக்காவிட்டால் நீ சீன தூதரகத்துக்கு வெளிப்படையாக அல்லவா போயிருந்திருக்க வேண்டும்? அதை விட்டு ஏன் இந்த ரகசிய விஜயம்? ஏன் இந்த மூடி மறைப்பு? எதை மறைக்கிறான் இந்த மூளை வளர்ச்சியில்லாத நேருவின் வாரிசு?

சீனா இந்தியாவை மிரட்டிக் கொண்டிருக்கும் இந்த வேளையில் ஒரு எதிரி நாட்டுத் தூதுவரை ரகசியங்கள் அறிந்த ஒரு காங்கிரஸ் கட்சித் தலைவர் ரகசியமாக யாருக்கும் தெரியாமல் சென்று சந்தித்தது தேசத் துரோகக் குற்றமாகக் கருதப் பட்டு விசாரணை செய்யப் பட வேண்டும்

நேருவின் ஜால்ராக்களும் கூஜாக்களும் சீன ஏஜெண்டுகளும் கம்னியுஸ்டு கைக்கூலிகளும் ராக்கூழ் சென்றதில் என்ன தப்பு என்று கூசாமல் கேட்க்கிறார்கள். சென்றது தப்புத்தான். இதையே இந்திய பாக்கிஸ்தான் யுத்தம் நடந்த பொழுது ஒரு வாஜ்பாய் பாக்கிஸ்தான் தூதரகத்திற்கு ரகசியமாக சென்று சந்தித்திருந்தால் இதே கைக்கூலிகள் என்ன சொல்லியிருப்பார்கள்? மாறாக வாஜ்பாய் அன்று இந்திராவுக்கு உறுதுணையாக அல்லவா இருந்தார்? இன்று அமெரிக்காவில் இந்த விஷயத்துக்காக ட்ரம்ப்பின் பையனை விசாரிக்கப் போகிறார்கள். தேர்தல் சமயத்தில் கூட எதிரி நாட்டு ஆட்களை ரகசியமாக சந்தித்தது ராஜ துரோகக் குற்றம் என்றும் விசாரணை முடிவில் சிறைக்குச் செல்ல நேரிடலாம் என்றும் ட்ரம்ப்பின் பதவியைப் பறிக்க வேண்டும் என்றும் சொல்கிறார்கள். ஒரு சாதாரண தேர்தல் நேரத்தில் பகை நாட்டின் ஆட்களை சந்தித்ததே குற்றம் என்று விசாரணை செய்கிறார்கள் அமெரிக்காவில். ஆனால் இந்தியாவிலோ சீனா போர் தொடுப்பேன் என்று சொன்ன பின்னாலும் கூட சீனாவின் படைகள் எல்லையில் குவிக்கப் பட்டிருக்கும் நிலையிலும் கூட எதிர்க்கட்சித் துணைத் தலைவரும் எதிர் கால பிரதமரும் ஆன ஒருவர் போய் அந்த தூதரக அதிகாரியை ரகசியமாகச் சந்தித்து விட்டு அந்த சந்திப்பே நடக்கவில்லை என்று பொய்யும் சொல்லுகிறார் இருந்தும் அவர் போனதில் என்ன தப்பு என்று கூசாமல் ஜால்ரா போடுகிறார்கள் நேருவீய கம்னியுசக் கைக்கூலிகள்.

சென்றது தவறாக இல்லாமல் இருந்தாலும் கூட எதற்காக ரகசியமாக அதைச் செய்தான் எதற்காக மறைத்தார்கள் என்பதை நேருவின் பக்தர்களாவது கேட்டுச் சொல்ல வேண்டும். மாறாக அப்படியே சென்றிருந்தாலும் ஏன் அப்படியே சீனாவுடன் கூட்டணி வைத்து இந்தியா மீது போர் தொடுத்திருந்தாலும் என்ன தப்பு? ஏற்கனவே கம்னியுஸ்டுகள் 1962 போரில் செய்யவில்லையா? இவனது தாத்தா நேரு நாட்டை விற்கவில்லையா ஆகவே பேரன் செய்வதில் என்ன தப்பு என்று கூசாமல் கேட்டாலும் கேட்ப்பார்கள். இவர்களைப் போன்ற தேச விரோத சக்திகளுக்காகத்தான் இவர்கள் இப்படி எல்லாம் எழுத சுதந்திரம் அளிப்பதற்காகத்தான் எல்லையில் வீரர்கள் உயிரை விட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் பாவம் இவர்களைத் துரத்தும்

கட்டுரை: ச. திருமலை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 31 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘இல்லத்தரசி கூப்பன்’ நன்மையா? நிதிச்சுமையா?

சட்டமன்ற தேர்தலுக்காக தி.மு.க. கொடுத்திருக்கும் தேர்தல் வாக்குறுதிகளில் மகளிர் உரிமைத்தொகை ரூ.2000 ஆக உயர்த்தப்படும் அறிவிப்பும், ரூ.8000 இல்லத்தரசி கூப்பன்

பஞ்சாங்கம் மார்ச் 30 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

வேதப் பண்பாட்டில் முறையற்றது எதுவுமில்லை!

வேதங்கள் வேறு, புராணங்கள் வேறு என்று புராணங்களை கீழ்மைப்படுத்துவதைப்  பார்க்க முடிகிறது. மேலும் சிலர், இவை எதுவும் தேவையில்லை. வேதாந்தம் மட்டுமே  போதும் என்பார்கள்

ஶ்ரீவில்லிபுத்தூர் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருமஞ்சனம்..

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கல்யாண உற்சவம் நடந்து வரும் நிலையில்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 31 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘இல்லத்தரசி கூப்பன்’ நன்மையா? நிதிச்சுமையா?

சட்டமன்ற தேர்தலுக்காக தி.மு.க. கொடுத்திருக்கும் தேர்தல் வாக்குறுதிகளில் மகளிர் உரிமைத்தொகை ரூ.2000 ஆக உயர்த்தப்படும் அறிவிப்பும், ரூ.8000 இல்லத்தரசி கூப்பன்

பஞ்சாங்கம் மார்ச் 30 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

வேதப் பண்பாட்டில் முறையற்றது எதுவுமில்லை!

வேதங்கள் வேறு, புராணங்கள் வேறு என்று புராணங்களை கீழ்மைப்படுத்துவதைப்  பார்க்க முடிகிறது. மேலும் சிலர், இவை எதுவும் தேவையில்லை. வேதாந்தம் மட்டுமே  போதும் என்பார்கள்

ஶ்ரீவில்லிபுத்தூர் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருமஞ்சனம்..

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கல்யாண உற்சவம் நடந்து வரும் நிலையில்...

வளைகுடா போர்கள் தொடர்பில், வதந்திகளை நம்பாதீர்: பிரதமர் வேண்டுகோள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலில் மீண்டும் ஒருமுறை  உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன்.  இந்த மார்ச் மாதம், உலக அளவில் பெரும் கொந்தளிப்பு நிறைந்த மாதமாக இருக்கிறது. 

பஞ்சாங்கம் மார்ச் 29 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை ஐயப்பன் கோயில் ஆராட்டு விழா ஏப்ரல் 1இல்..

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திர ஆராட்டு விழா ஏப்ரல்...

Entertainment News

Popular Categories