அண்ணா என் உடைமைப் பொருள் (22): பெரியவாளிடம் பயபக்தி; ஸ்வாமியிடம் ஸ்வாதீனம்!

anna

அண்ணா என் உடைமைப் பொருள் – 22
பெரியவாளிடம் பயபக்தி; ஸ்வாமியிடம் ஸ்வாதீனம்!
– வேதா டி. ஸ்ரீதரன் –

பெரியவா ஞான சாகரம் என்பதைக் குறிப்பிட்டிருந்தேன். இந்த ஞான சாகரத்துக்கும் பர்த்தியின் ப்ரேம சாகரத்துக்கும் நடுவே பயணித்தவர் அண்ணா என்பதை அனைவரும் அறிவோம்.

ஞானம், ப்ரேமை என்றதுமே, ஸ்வாமி விவேகானந்தர் பற்றி அண்ணாவிடம் பெரியவா சொன்ன விஷயம் நினைவு வருகிறது. The head of Sankara and the heart of Buddha என்று ஸ்வாமிஜி சொல்லுவார்.

அதைப் பற்றி அண்ணாவிடம் ஒருமுறை குறிப்பிட்ட பெரியவா, ‘‘ஹெட்-னா அறிவு, ஹார்ட்-னா ப்ரேமைங்கற அர்த்தத்தில ஆசார்யாளின் அறிவு, புத்தரின் ப்ரேமை-ன்னு அவர் சொல்றார். அதைப் படிச்சா ஆசார்யாளுக்கு ப்ரேமையே இல்லியோன்னு நினைக்கத் தோணறது. ஆசார்யாள் என்ன வறட்டு வேதாந்தியா? அவரோட கருணை பெரிசு இல்லியா? அவருக்கு இல்லாத கருணையா? பெத்த அம்மாவை பரிதவிக்க விட்டுட்டு, இத்துனூண்டு வயசில தேச சஞ்சாரம் புறப்பட்டதுக்குக் காரணம் சமுதாயத்தின் பேர்ல இருக்கற கருணை இல்லியா?’’ என்று ஆரம்பித்து, ஆசார்யாளின் ப்ரேமையையும் கருணையையும் பற்றி கருணா பிரவாகமாகப் பேசினாராம்.

ஆசார்யாளின் சரிதம் என்பதே காருண்யம் தான், ப்ரேமை தான் என்பதை அப்போது பெரியவா விவரித்ததாக அண்ணா குறிப்பிட்டார்.


ஸ்வாமி பற்றி அண்ணா நிறைய எழுதி இருந்தாலும், ‘‘ஸ்வாமி’’ புத்தகம் மிகவும் குறிப்பிடத்தக்கது. ஸ்வாமியின் சரிதம் குறித்த முழுமையான விவரங்கள் அடங்கிய நூல் தமிழில் ‘‘ஸ்வாமி’’ மட்டும் தான் என்று சொன்னால் தவறில்லை. இதனால் நிறைய சாயி பக்தர்களுக்கு அண்ணாவின் மீது மிகுந்த மதிப்பும் மரியாதையும் உண்டு.

அண்ணா எப்போது தரிசனத்துக்குப் போனாலும், ஸ்வாமிக்கு அண்ணா ஃபர்ஸ்ட். நேரே அண்ணா அமர்ந்திருக்கும் இடத்துக்குப் போவார், உடனே தலையைத் தட்டி ‘‘Go’’ தான். அண்ணா எப்போது வந்தாலும் ஸ்வாமி அவருக்கு நேரம் ஒதுக்குவார்.


anna alias ra ganapathy4 - 2026

பெரியவா பக்தர்களுக்குப் பெரியவா தான் எல்லாம். அதேபோல, ஸ்வாமி பக்தர்களுக்கு ஸ்வாமி தான் எல்லாம். இதெல்லாம் சரி, அவர்கள் இரண்டு பேர் மீதும் பக்தி கொண்ட அண்ணாவைப் போன்றவர்கள் எப்படி? பெரியவா என்றால் கை கட்டி, வாய் பொத்தியும், ஸ்வாமியைப் பற்றிப் பேச்செடுத்தால் அன்யோன்யமாகவும் என்று இருக்குமாம்!

பெரியவாளிடம் பயபக்தி. ஸ்வாமியிடம் ஸ்வாதீனம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

Topics

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

10, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போ வருது தெரியுமா?

தமிழ்நாட்டில், 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே மாதம் 8-ம் தேதி காலை 9:30 மணியளவில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிறரிடம் இருக்கும் அர்ப்பணிப்பு நம்மிடம் ஏன் இல்லை?

பிற மதத்தவரோடு ஒப்பிட்டால் இளைய தலைமுறையைச் சேர்ந்த ஹிந்துக்களிடம் ஹிந்து மதம் பற்றிய ஞானமும், அவற்றைக் கடைப்பிடிப்பதில் ஆர்வமும் குறைந்து காணப்படுகிறது.

மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலம்:

மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலமாக இன்று புதன்கிழமை நடைபெற்றது.மாசி வீதிகளில்...

Entertainment News

Popular Categories