உங்களுடைய ரத்தத்தை தாருங்கள் பதிலுக்கு உங்களுக்கு சுதந்திரத்தை தருகிறேன் என்று சொன்ன போஸை அவர்
ஒரு டென்சன் பார்ட்டி- மெச்சூரிட்டி இல்லாதவர் என்று ஒப்பாரி வைத்தவர்கள் இந்திய அரசியலில் இருவர் உண்டு.ஒருவர் காந்தி இன்னொருவர் நேரு.நடிப்பவர்களுக்கு நன்றாகவே தெரியும் உண்மையானவர்கள் உணர்ச்சி வசபடுவார்கள் என்று..
காங்கிரசில் காந்திக்கும் நேதாஜிக்கும் ஆரம்பத்தில் இருந்தே பிடிக்காமல் போக முக்கிய காரணம் தேசபந்து என்றழைக்கபட்ட சித்தரஞ்சன் தாஸ் தான்.ஏனெனில் நேதாஜியின் அரசியல் குருவே தாஸ் தான். இருவரும் வங்காளத்தை சேர்ந்தவர்கள்.இருவரும் ஐசிஎஸ் படித்தவர்கள்.தாஸின் அறிவுரையின் படியே ஐசிஎஸ் பதவியை உதறிவிட்டு சுதந்திர போராட்டத்தில் 1921 ம் ஆண்டில் பங்கேற்க வந்தார்.போஸ்.
காந்திக்கும் தாசுக்கும் இருந்த கருத்து வேறுபாடுகள் காரணமா கவே அவருடைய சிஷ்யரான சுபாசையும்காந்தி வெறுக்க
ஆரம்பித்தார்.1928ம் ஆண்டு மே மாதத்தில் நடந்த மராட்டிய மாநில காங்கரஸ் அரசியல் மாநாட்டிற்கு தலைமை தாங்கிய நேதாஜி, பூரண சுதந்திரமே இந்தியாவின் இலட்சியம் என்று பிரகடனம் செய்தார்.
ஆனால் காந்தியோ எங்களுக்கு பரிபூரண சுதந்திரம் தேவை யில்லை..ஆங்கிலேயர்களின் நிர்வாகத்துக்கு உட்பட்ட ஆட்சியமைப்பு போதும் என்றார்.இதில் காமெடி என்ன வென்றால் 1927ல் சென்னையில் கூடிய காங்கிரஸ் கூட்டத்தில் பூரண சுயராஜ்யமே நமது குறிக்கோள் என்று தீர்மானம் போடபட்டிருந்தது.
அடுத்து1929 ம் வருடம் லாகூரில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் காந்தியே பூரண சுதந்திரம் வேண்டும் என்றார்.
இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால் எது செய்தாலும் புகழும் பெயரும் தனக்கே வரவேண்டும் என்றே செயல்பட்டுள்ளார் என்றே தெரிகிறது.ஏனெனில் அது மட்டுமல்லாமல் லாகூர் மாநாட்டில் காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க தேர்தல் ஜனவரி 2ம் தேதி நடை பெரும் என்று அப்போதைய தலைவர் நேரு அறிவித்திருந்தார். அதை அறிந்த நம்ம போஸும் வங்காள சிங்கங்கள் ஊருக்கு சென்று விட்டார்கள்.
இதை பயன் படுத்தி குறுக்கு புத்தி கொண்ட காந்தியும் நேருவும் போஸ் இல்லாத நாளிலேயே தேர்தல் வைத்து அவர்கள் ஆட்களே தேர்ந்தெடுத்து கொண்டார்கள் என்பதை நினைத்தால் காந்தி எல்லாம் ஒரு மகான் என்று எவனாவது சொன்னால் காரி துப்பி விடுவேன் அவன் மூஞ்சியில்..
தான் இல்லாத நேரத்தில் தேர்தல் நடத்திய காந்தி நேருவின் திருட் டு தனத்தை அறிந்த நேதாஜி பொங்கி எழுந்து விட்டார். பின்னே இருக்காதா…உண்மையானவன் என்றும் உணரச்சி வசப்படவே செய்வான்.கோபப்பட்ட நேதாஜி உடனே காங்கிரஸ் ஜனநாயக கட்சி என்ற புதிய கட்சியை அன்றே அறிவித்தார்.
இதை விட நேரு செய்த பெரிய எட்டப்பன் வேலை எது தெரியுமா?
இந்திய சுதந்திரத்திற்கு வெளி நாடுகளில் ஆதரவு திரட்டி கொண்டி ருந்தார் நேதாஜி.அப்படி வியன்னாவில் இருந்த பொழுது எட்டப்பன் நேரு கடிதம் எழுதி லட்சுமணபுரியில் நடைபெற உள்ள காங்கிரஸ் மாநாட்டிற்கு தலைமை தாங்க வாருங்கள் என்று உருகி அழைத்தார்.
ஆயிரம் தான் நேருமீது கோபம் இருந்தாலும் தேசத்தின் விடுதலை சம்பந்த பட்ட விஷயம் என்றவுடன் வியன்னாவில் இருந்து பம்பாய் வந்த போஸை ஆங்கிலேய அரசு அள்ளி ஜெயிலில் போட்டது.வெளிநாட்டில் இருந்த போஸை வெள்ளைக்காரன் பேச்சை கேட்டு இந்தியா வரவைத்து ஜெயிலில் அடைத்த மாமா தான் நேரு.
இருந்தாலும் பதினோரு மாதங்களில் ஜெயிலில் இருந்து வெளி வந்த போஸ் 1937ம் ஆண்டு நவம்பர் மாதம் 10ம் தேதி கல்கத்தா வில் காங்கிரஸ் கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இப்படி காங்கிரஸ் கட்சியில் போஸுக்கும் காந்திக்கும் உட்கட்சி போர் நடந்து வரும் நிலையில் 1939 ம் ஆண்டில் செப்டம்பர் மாதம்இரண்டாம் உலகப்போர் வந்து விட்டது..இந்த போரில் இங்கிலாந்தும் பங்கேற்கும் அதனால் அவர்களை சுதந்திரம் கேட்டு டிஸ்டர்ப் செய்ய கூடாது என்றார் காந்தி..ஆஹா..என்ன ஒரு தேச பற்று…
ஆனால் நேதாஜியோ இது தான் சரியான சந்தர்ப்பம் ..ஏனெனில் வெளிநாடுகளுடன் போர் நடைபெறும் பொழுது இங்கிலாந்தால் இந்தியாவின் உள்நாட்டில் கவனம் செலுத்த முடியாது ..ஆதலால் போராட்டத்தை தீவிர படுத்த வேண்டும் என்றார். இந்த நிலையில் தான் காங்கிரஸ் தலைவர் தேர்தல் வந்தது.இதில் போட்டியிட்ட நேதாஜியை எதிர்த்து காந்தியின் கைத்தடி பட்டாபி சீதாராமய்யர் போட்டியிட்டார்.
தேர்தல் நடந்த பொழுது காந்தி சீதாராமய்யருக்கு போடும் ஓட்டு எனக்கு போடும் ஓட்டு என்று காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர் களிடம் மன்றாடினார்.ஆனால் நேதாஜி மாபெரும் வெற்றி பெற்றார்.இதனால் கட்சி தன்னுடைய கையை விட்டு போவதை அறிந்த காந்தி பட்டாபியின் தோல்வி என்னுடைய தோல்வி காங்கிரஸ் கட்சி பாதை மாறுகிறது என்று கூறி உண்ணாவிரதம் இருந்தார்.
இதனால் மனம் மாறியசெயற்குழு உறுப்பினர்கள் நேதாஜிக்கு ஒத்துழைப்பு தர மறுத்தனர்.கடைசியில் காந்தியின் கபடவேடம் வெற்றி பெற்றது.நேதாஜி தன்னுடைய காங்கிரஸ் கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். ராஜினாமா செய்த பின் கல்கத்தா வில் உள்ள ஹஸ்ரா பூங்காவில் நேதாஜி நிகழ்த்திய நான் ஏன் ராஜினாமா செய்தேன் என்ற உரையை கேட்டு மானமிருந்து இருந்தால் காந்தியும் நேருவும் அன்றே அரசியலில் இருந்து விலகி இருப்பார்கள்.


