இஸ்லாம் மதத்தில் தர்கா வழிபாடு, தாயத்து, பில்லிசூனியம் போன்றவற்றை செய்துகொண்டிருக்கும் இந்திய முஸ்லீம்களை திருத்தி வழிகாட்ட நடத்தப்படும் ஷிர்க் ஒழிப்பு மாநாடு “அது மற்ற மதத்தை சீண்டாத வரை” வரவேற்க வேண்டிய ஒன்று.
ஒவ்வொரு மிஷனரி மதத்திற்கும் தன் மதத்தை பின்பற்றுபவர்களை இதைச்செய் இதைச்செய்யாதே எனக்கூற உரிமை உண்டு. தீவிரவாதம் செய்யாதே என்று யாராவது சொல்வார்களா என்று பார்க்கிறேன். சில மத அமைப்புகள் மற்றவர்களை கொலை செய்வது குரானில் சொல்லப்பட்டிருக்கிறது என்பதை ஆதாரமாக காட்டுகிறார்கள்!
இதே போல கிருத்துவம் மதத்திற்கும் ஒரு ஒழிப்பு மாநாடு தேவை. தென் மாவட்டங்களில் கிருத்துவ மதம் தனித்துவம் இழந்து வேகமாக இந்து மதமாக உருமாறி வருகிறது.
விஷயம் தெரியாமல் குத்துவிளக்கு ஏற்றி தீபத்தை வணங்க ஆரம்பித்துவிட்டார்கள். லஷ்மி விளக்கு போல மேரி விளக்கு வைத்து அழகு பார்க்கிறார்கள். சிலை வழிபாடு முட்டாள் தனம் என்று கூறி மதம் மாற்றியவர்கள் பல சர்ச்களிலும் சிலை முன் தான் மண்டியிடுகிறார்கள். பல சர்ச் களிலும் என்ன விஷயம் என்று தெரியாமல் கொடி மரம் வைத்திருக்கிறார்கள். இந்து கோவில்களைப்போல கொடியேற்றம் கொடியிறக்கம் நடக்கிறது. கிருத்துவ மத சிலைகளை வைத்து தேர் இழுக்கிறார்கள். மேற்கத்திய பேண்ட்செட் அடித்தவர்கள் இப்போது மேளதாளம் சிங்காரி மேளம் என்பதற்கு மாறிவிட்டார்கள். ஊதுபத்தி கொழுத்துவது எல்லாம் எப்போதோ வந்துவிட்டது. சூடம் காட்டுவது கூட சில இடங்களில் வந்துவிட்டதாக கேள்வி. இதற்கும் மேல் சர்ச்களை இந்து சமய கோவில்களைப்போல கட்டி அழகு பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள். கிருத்துவம் தோன்றிய நாட்டில் மலர்களை வைத்து மாலை கட்டி பயன்படுத்தும் பழக்கம் இருந்ததா என தெரியவில்லை ஆனால் இந்திய கிருத்துவர்களிடம் இந்த பழக்கம் உண்டு.
செத்தவன் எப்படி கடவுளாக முடியும் என்று கேட்டவர்கள் இப்போது மனிதனாக பிறந்து செத்தவர்களை புனிதர்களாக்கி அவர்களுக்கும் சர்ச் கட்ட ஆரம்பித்துவிட்டார்கள். இறந்த முன்னோர்களை வணங்கக்கூடாது என்போர்கள் நினைவுகூறுதலை விட்டுவிட்டு கல்லறை முன் வணங்க ஆரம்பித்துவிட்டார்கள். பல கிருத்துவர்களும் இப்போது யோகா, தியானம் செய்கிறார்கள். சிவனின் பரத நாட்டியம் கற்கிறார்கள்.
மற்றவர்களிடம் ஜோஷியம் கேட்ட காலம் போய் கிருத்துவர்களே ஜோஷியம் சொல்ல ஆரம்பித்து அந்த பிசினஸ் நடந்துகொண்டிருக்கிறது. ஏசு உருவம் பதித்த தகடு வைத்திருக்கிறார்கள். இந்துக்கள் போல நம்பிக்கைக்காக கையில் நூல் கட்டுகிறார்கள். யோகிகள் மந்திரம் சொல்ல பயன்படுத்தும் முத்து மாலை வைத்து எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். இந்துக்களைப்போல திருமண பொருத்தம் பார்க்கிறார்கள். நல்ல நேரம் பார்த்து நல்ல செயல்களை துவங்க ஆரம்பித்துவிட்டர்கள். இந்துக்களைப்போல வேண்டுதல்களும் பரிகாரம் செய்வதும் உண்டு.
வீடு கட்டும் முன் பூமி பூஜை போடுகிறார்கள். பலரும் வீடு கட்ட வாஸ்து பார்க்கிறார்கள். பூவைத்தல் பொட்டு வைத்தல் எல்லாம் எப்போதோ வந்துவிட்ட விஷயங்கள். தேவன், ஜபம், தேவாலயம், பாவம், பாவி, போன்ற பல சம்ஸ்கிருத சொற்களையே அவர்களும் பயன்படுத்துகிறார்கள். இந்துக்களின் ஏடு வாசித்தல் போல அவர்களும் எதையோ எழுதிவைத்து வாசிக்கிறார்கள்.
மலை மேல் சர்ச்களை வைத்து மலை ஏற ஆரம்பித்தாகிவிட்டது. இனி சீக்கிரமே அலகு குத்துதல் காவடி எடுத்தல் பழக்கும் வந்துவிடும் என்பதில் ஐயமில்லை. ஏசு சிலை வைத்து அபிஷேகம் செய்வது மட்டும் தான் பாக்கி. அதுவும் சீக்கிரமே வந்து இந்துவாக மாறிவிடும்.
இந்து சமயத்தின் தலைமை உரிமையை யாரும் எடுத்துக்கொள்ள முடியாது என்பதால் இந்துக்கள் செய்யும் சில சடங்குகளை யாரும் குறை சொல்ல உரிமை இல்லை. அனைத்து சடங்குகளும் அவரவர் நம்பிக்கை அந்தந்த ஊர் பழக்கம் என்பதுடன் நின்றுவிடுகிறது. காலப்போக்கில் தேவையற்ற சடங்குகள் தானாகவே அழிநதுவிடும். இருந்தாலும் பல குருமார்கள் அவ்வப்போது இதை செய் செய்யாதே என்பதை சொல்லி வருகிறார்கள், கேட்கத்தான் ஆள் இல்லை. யார் சொல்லி யார் கேட்பது?


