அப்பாச்சி தீர்வு: பச்சிளம் குழந்தைகள் நலம்..!

health tips - 2026

குழந்தைச்சளி

நெஞ்சில் சளி பிடித்தால் குழந்தைகள் மூச்சுவிட சிரமப்படும். அந்த சமயங்களில் ஜாதிக்காயை உரைத்து குழம்பாக்கி அதை குழந்தைகளின் நெஞ்சில் பற்றாகப் போட்டால் சளி உடைந்து வெளியேறிவிடும்.

குழந்தை இருமல்

துளசி இலையின் சாற்றுடன் வெற்றிலைச் சாறையும், தேனையும் சம அளவில் கலக்கி தினமும் மூன்றுவேளை ஒரு சங்கு அளவு குழந்தைகளுக்குப் புகட்டிட இருமல் நோய் மறைந்துவிடும்.

குழந்தைகள் மாந்தம்

சித்தரத்தையை எடுத்து அதள் மேல் விளக்கெண்ணையை நன்றாகத்தடவி நெருப்பு உஷ்ணத்தில் கருகும்படியாக சுட்டெடுக்கவேண்டும். பின்பு அதைச் சுத்தம்செய்து மருந்து உரைக்கும் கல்லில் தேனைவிட்டு, உரைக்கவேண்டும். பின்பு அதை ஒரு பட்டாணி அளவு எடுத்து குழந்தைக்கு சங்கில் வைத்து தினம் இருவேளை புகட்டி வந்தால் மாந்த நோய் குணமாகும்.

குழந்தைகளின் கோழை வடிதல் நிற்க

நாய்த்துளசிசாற்றை எடுத்துக்கொண்டு அதனுடன் தாய்ப்பாலின் சில துளிகளைச் சேர்க்கவேண்டும். அதை தினமும் மூன்றுவேளை வீதம் மூன்று நாட்களுக்கு குழந்தைகளுக்கு கொடுத்துவந்தால் கோழைவடிதல் நின்றுவிடும்.

குழந்தைகள் காய்ச்சல்

குழந்தைகளுக்கு உண்டாகும் சகலவிதமான காய்ச்சல்களும் குணமாக கீழ்க்கண்ட வைத்தியத்தைச் செய்யலாம்.

மிளகு, நிலவேம்பு, மஞ்சள் இவை ஒவ்வொன்றையும் அரைரூபாய் எடை அளவுக்கு எடுத்து அம்மியில் வைத்துதட்டி ஒரு சட்டியில் போடவேண்டும். அதனுடன் ஒரு டம்ளர் தண்ணீர்விட்டு அடுப்பில் வைத்து காய்ச்ச வேண்டும். அது அரை டம்ளர் அளவுக்கு வற்றியவுடன் இறக்கிவிடவேண்டும். ஆறினதும் வடிகட்டி தினசரி இரு வேளை ஒரு சங்கின் அளவுக்கு குழந்தைகளுக்கு புகட்ட வேண்டும். இவ்வாறு செய்தால் குழந்தைகளுக்கு உண்டாகும் சகலவிதமான காய்ச்சல்களும் குணமாகும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

Topics

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

10, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போ வருது தெரியுமா?

தமிழ்நாட்டில், 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே மாதம் 8-ம் தேதி காலை 9:30 மணியளவில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிறரிடம் இருக்கும் அர்ப்பணிப்பு நம்மிடம் ஏன் இல்லை?

பிற மதத்தவரோடு ஒப்பிட்டால் இளைய தலைமுறையைச் சேர்ந்த ஹிந்துக்களிடம் ஹிந்து மதம் பற்றிய ஞானமும், அவற்றைக் கடைப்பிடிப்பதில் ஆர்வமும் குறைந்து காணப்படுகிறது.

Entertainment News

Popular Categories