அப்பாச்சி தீர்வு: பச்சிளம் குழந்தைகள் நலம்..!

health tips - 2026

குழந்தைச்சளி

நெஞ்சில் சளி பிடித்தால் குழந்தைகள் மூச்சுவிட சிரமப்படும். அந்த சமயங்களில் ஜாதிக்காயை உரைத்து குழம்பாக்கி அதை குழந்தைகளின் நெஞ்சில் பற்றாகப் போட்டால் சளி உடைந்து வெளியேறிவிடும்.

குழந்தை இருமல்

துளசி இலையின் சாற்றுடன் வெற்றிலைச் சாறையும், தேனையும் சம அளவில் கலக்கி தினமும் மூன்றுவேளை ஒரு சங்கு அளவு குழந்தைகளுக்குப் புகட்டிட இருமல் நோய் மறைந்துவிடும்.

குழந்தைகள் மாந்தம்

சித்தரத்தையை எடுத்து அதள் மேல் விளக்கெண்ணையை நன்றாகத்தடவி நெருப்பு உஷ்ணத்தில் கருகும்படியாக சுட்டெடுக்கவேண்டும். பின்பு அதைச் சுத்தம்செய்து மருந்து உரைக்கும் கல்லில் தேனைவிட்டு, உரைக்கவேண்டும். பின்பு அதை ஒரு பட்டாணி அளவு எடுத்து குழந்தைக்கு சங்கில் வைத்து தினம் இருவேளை புகட்டி வந்தால் மாந்த நோய் குணமாகும்.

குழந்தைகளின் கோழை வடிதல் நிற்க

நாய்த்துளசிசாற்றை எடுத்துக்கொண்டு அதனுடன் தாய்ப்பாலின் சில துளிகளைச் சேர்க்கவேண்டும். அதை தினமும் மூன்றுவேளை வீதம் மூன்று நாட்களுக்கு குழந்தைகளுக்கு கொடுத்துவந்தால் கோழைவடிதல் நின்றுவிடும்.

குழந்தைகள் காய்ச்சல்

குழந்தைகளுக்கு உண்டாகும் சகலவிதமான காய்ச்சல்களும் குணமாக கீழ்க்கண்ட வைத்தியத்தைச் செய்யலாம்.

மிளகு, நிலவேம்பு, மஞ்சள் இவை ஒவ்வொன்றையும் அரைரூபாய் எடை அளவுக்கு எடுத்து அம்மியில் வைத்துதட்டி ஒரு சட்டியில் போடவேண்டும். அதனுடன் ஒரு டம்ளர் தண்ணீர்விட்டு அடுப்பில் வைத்து காய்ச்ச வேண்டும். அது அரை டம்ளர் அளவுக்கு வற்றியவுடன் இறக்கிவிடவேண்டும். ஆறினதும் வடிகட்டி தினசரி இரு வேளை ஒரு சங்கின் அளவுக்கு குழந்தைகளுக்கு புகட்ட வேண்டும். இவ்வாறு செய்தால் குழந்தைகளுக்கு உண்டாகும் சகலவிதமான காய்ச்சல்களும் குணமாகும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மார்ச் 25 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் – மார்ச் 25 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

Entertainment News

Popular Categories