“என் அனுமதி இல்லாமல் ஒருவரும் என்னைப் புண்படுத்த முடியாது”: மகாத்மா காந்தி!

gandhiji sand art sudarsan patnaik - 2026
ஒடிஷா மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக் வரைந்த மணல் ஓவியங்கள்….

வாழ்க்கைக்கான வாசகம் இது. அதுவும் காந்திஜியின் வாசகம் இது!

நான் சில வருடங்களுக்கு முன் சென்னை செல்வதற்காக சேவாக்கிராம் ரெயில் நிலையம் சென்ற போது, காந்தியடிகளின் வாசகங்கள் அங்கு பல இடங்களில் போர்டுகளில் எழுதி வைக்கப்பட்டிருந்தன. அந்த வாசகங்கள் படிப்பதற்கு மிகவும் அற்புதமாக இருந்தன.

அதில் குறிப்பாக “என்னுடைய அனுமதி இல்லாமல் ஒருவரும் என்னைப் புண்படுத்த முடியாது- மகாத்மா காந்தியடிகள்” என்ற வாசகம் என் மனதில் பதிந்தது. எத்தனை ஒரு மனமுதிர்ச்சியான வார்த்தைகள். இவ்வாறு தன் கருத்தை தெரிவிக்க அவர் தம் வாழ்வில் எத்தனை அனுபவங்களை எதிர்கொள்ள வேண்டி இருந்திருக்கும்!

“தன்னுடைய நடத்தையினாலேயே தமக்கு நன்மையோ, தீமையோ நிகழும்” – என உரைக்கும் ஒரு அருமையான வாசகம். இதனை ஒரு கட்டுரையாக எழுதினேன். ஆங்கில நாளிதழான ‘தி ஹித்வாத்’ -தில் பிரசுரமாகி இருந்தது.

காந்தியடிகளின் வாசகங்கள் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தன. அதனால் ரயில்வே நிர்வாகத்திற்கு ‘காந்தியடிகளின் வாசகங்களை உள்ளூர் மொழியான மராட்டியில் எழுதினால் காந்தியடிகளின் செய்தி பலரை சென்றடையும்’ என்ற கோரிக்கையுடன் அந்தக் கட்டுரையை முடித்திருந்தேன்.

ALSO READ:  இஸ்ரேல் பதிலடி: எக்ஸ் கணக்கை டெலிட் செய்து ஓடிய பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர்!

வருடங்கள் கழிந்தது. நாக்பூர் குடி பெயர்ந்தோம். எங்கள் தெருவில் தமிழ்க் குடும்ப உறுப்பினருடன் பழகும் வாய்ப்பு கிடைத்தது. கடந்த நவராத்திரியின் முதல் நாள், பக்கத்து வீட்டில் திருமதி மஹாலட்சுமி ஸ்ரீநிவாஸன் நவராத்திரிக்காக கொலு பொம்மைகளை அடுக்கி வைத்துக்கொண்டு இருந்தார். நானும் அவர்களுக்கு உதவி செய்தேன்.

englishpaper - 2026

அப்போது, ஒரு பொம்மையை சுற்றியிருந்த நாளிதழின் காகிதத்தைப் பிரித்த போது, ஒரு நிமிடம் கண்ணில் ஆனந்தக் கண்ணீரே வந்துவிட்டது. “மாமி, இது நான் எழுதின காந்தியைப் பற்றிய கட்டுரை” என்று சந்தோஷத்தில் குரல் கொடுத்தேன்.

அந்த மாமியும் அதைப் பார்த்தவுடன் என்னை ஆரத் தழுவிக் கொண்டார். மாமியும் சென்ற வருடம் அவர்கள் வீட்டிற்கு நவராத்திரிக்கு வந்தவர்களிடம் அந்த கட்டுரையைக் காட்டி மகிழ்ந்தார்.

இன்று காந்தியடிகளின் 150 -வது பிறந்த நாளன்று காந்திஜியின் அந்த வாசகமும், செரிண்டிபிடி கணக்காக திடீரென கண்ணில் அகப்பட்ட பேப்பரும் இன்று நிழலாடியது.

வாழ்க்கைக்கு அர்த்தம் தருகின்ற காந்தியடிகளின் இந்த வாசகத்தை மனதில் வைத்துக் கொண்டு, நம் வாழ்வில் நடக்கும் நல்லதுக்கும் கெட்டதுக்கும் நாமே காரணம் என்பதை உணர்வோம்! வாழ்க காந்தியடிகள்!! வாழ்க அவர் புகழ்!!

  • ஜெயஸ்ரீ எம். சாரி, நாக்பூர்.
ALSO READ:  ரமாபாய், சவிதா அம்பேத்கர்: இந்திய வரலாற்றில் மறைந்த உருவங்கள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories