புலி பிடிக்க வரும் ஷபாத் அலி! பந்திப்பூர் சரணாலயம்!

tiger - 2026

கர்நாடகாவில் பந்திப்பூர் வனத்தில் 2 மனிதர்களை கொன்று, 14 கால்நடைகளை கொன்ற புலியை பிடிக்க மிகப்பெரிய தேடுதல் வேட்டையில் கர்நாடகா வனத்துறை இறங்கி உள்ளது.

pandhippur - 2026

தமிழகத்தின் நீலகிரி வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது பந்திப்பூர் புலிகள் சரணாலயம். பந்திப்பூர் புலிகள் சரணலாயம் பெங்களூருவில் இருந்து சுமார் 220 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. மொத்தம் 872 சதுர கிலோமீட்டர் உடைய இந்த வனப்பகுதி தமிழக மற்றும் கர்நாடகா எல்லையில் அமைந்துள்ளது. ஊட்டியில் இருந்து சுமார் 40 கிலோமீட்டருக்கும் குறைவான துரத்தில் தான் இந்த வனப்பகுதி உள்ளது.

கர்நாடகா மாநிலத்தில் உள்ள இந்த வனப்பகுதியில் ஒற்றை புலி ஒன்று இதுவரை இரண்டு மனிதர்களை கடித்துக் கொன்றுள்ளது. அத்துடன் வனத்தினை ஒட்டியுள்ள கிராமங்களில் 14 கால்நடைகளை அடித்து சாப்பிட்டுள்ளது.

tiger 1 - 2026

மனிதர்களை கொன்று சாப்பிட்டு ருசி கண்ட புலியை பிடித்தே தீரவேண்டும் என்று அந்த பகுதி மக்கள் வனத்துறைக்கு கோரிக்கை வைத்தனர்.

இதையடுத்து அந்த புலியை பிடிப்பதற்காக கர்நாடகா வனத்துறை மிகப்பெரிய தேடுதல் வேட்டையில் இறங்கி உள்ளது. வனத்துறை காவலர்கள் ஏராளமானோர் பந்திப்பூர் வனப்பகுதியில் 100க்கும் மேற்பட்ட கேமராக்களை நேற்று மாலை நிறுவி ஒற்றைப்புலியின் நடமாட்டத்தை கண்காணித்து வருகிறார்கள்.

tiger 2 - 2026

இன்று 60க்கும் மேற்பட்ட இடங்களில் கேமராக்களை நிறுவப்போகிறார்கள் என்று பந்திப்பூர் புலிகள் சரணாலய இயக்குனர் டி பாலச்சந்திரா கூறியுள்ளார்.

மனிதர்களை கொல்லும் புலியை பிடிப்பதில் வல்லவரான ஷபாத் அலி கானை மகாராஷ்டிராவில் இருந்து வரவழைத்துள்ளது கர்நாடகா வனத்துறை. இவர் மகாராஷ்டிராவின் அவ்னியில் புலியை சுட்டுக்கொன்றவர் ஆவார்.

இந்நிலையில் புலியை சுட்டுக்கொல்லாமல் பிடிக்க வேண்டும் என்பதே தங்களின் நோக்கம் என்றும், புலியை சுட்டுக்கொல்வதில் நாங்கள் ஆர்வம் காட்டவில்லை என்றும் அதை உயிருடன் பிடிக்க வேண்டும் என்றும் பாலசந்திரா கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 13 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது… 30 வருட பரிணாம வளர்ச்சி!

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது... 30 வருட பரிணாம வளர்ச்சி!

பஞ்சாங்கம் மார்ச் 12 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

எரிவாயு சிலிண்டர், பெட்ரோல்; மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்: பிரதமர் மோடி பேச்சு!

திருச்சியில் நடைபெற்ற தேஜகூட்டணி பொதுக்கூட்டத்தில், கூட்டணி தலைவர்கள் பேசியபோது,

தமிழருக்கான ரூ.5,650 கோடி திட்டங்கள் தொடங்க… இன்று திருச்சி வருகிறார் பிரதமர் மோடி!

தமிழகத்துக்கான ரூ.5,650 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களைத் தொடங்கி வைக்க, பிரதமர் நரேந்திர மோடி  திருச்சிக்கு வருகிறார். 

Topics

பஞ்சாங்கம் மார்ச் 13 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது… 30 வருட பரிணாம வளர்ச்சி!

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது... 30 வருட பரிணாம வளர்ச்சி!

பஞ்சாங்கம் மார்ச் 12 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

எரிவாயு சிலிண்டர், பெட்ரோல்; மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்: பிரதமர் மோடி பேச்சு!

திருச்சியில் நடைபெற்ற தேஜகூட்டணி பொதுக்கூட்டத்தில், கூட்டணி தலைவர்கள் பேசியபோது,

தமிழருக்கான ரூ.5,650 கோடி திட்டங்கள் தொடங்க… இன்று திருச்சி வருகிறார் பிரதமர் மோடி!

தமிழகத்துக்கான ரூ.5,650 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களைத் தொடங்கி வைக்க, பிரதமர் நரேந்திர மோடி  திருச்சிக்கு வருகிறார். 

பஞ்சாங்கம் – மார்ச் 11 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘அடிச்சி விடு’ புகழ், இப்போ ‘செல்லத் தட்டல்’ சேகர்பாபு ஆகிவிட்டார்: அண்ணாமலை கிண்டல்!

அது என்ன, திமுக தலைவர்கள் மட்டும் சாதாரண பொதுமக்களை அன்பாகத் தட்டிக் கொடுக்கும்போதெல்லாம், முகத்தை அப்படி கோபமாக வைத்துக் கொள்கிறீர்கள்?

தமிழகத்தில் இருந்த நாட்கள் பொற்கால நாட்கள்: ஆளுநர் ஆர்.என். ரவி உருக்கம்!

தமிழக மக்களுடன் கலந்து பழகிய 54 மாதங்கள் தம் வாழ்வின் பொற்கால நாட்கள் என்று தமிழக ஆளுநர் ஆர்என். ரவி உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.

Entertainment News

Popular Categories