பாகிஸ்தானை கலாய்த்த முன்னாள் மேஜர்!

pak - 2026

காஷ்மீர் பகுதியில் ஊடுருவி தாக்குதல் நடத்த பாகிஸ்தான் திட்டமிட்டு வருவதாகத் தகவல் பரவியது. இதையடுத்து இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. பாகிஸ்தான் தரப்பிலிருந்து எல்லைப் பகுதியில் தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்தத் தாக்குதலில் சில இந்திய வீரர்கள் பலியானதாக தகவல்கள் பரவியதால் எல்லையில் பதற்றமான சூழல் நிலவியது. இந்தநிலையில், நேற்று பாகிஸ்தானின் செயலுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய ராணுவம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இருக்கும் தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது.

இந்தத் தாக்குதலில் சில தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டதாகவும் தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் இந்திய ராணுவம் தரப்பிலிருந்து தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில், பாகிஸ்தான் தரப்பிலிருந்து இந்த விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்த பாகிஸ்தானியர்கள், இந்தியா அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்துவதாகவும் இதன் காரணமாக பல அப்பாவி மக்கள் பலியானதாகவும் தெரிவித்து வந்தது.

pak twt - 2026

இந்தச் சம்பவங்களால் நேற்றைய நாள் முழுவதும் இந்திய பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது. இதற்கிடையே, நேற்று பாகிஸ்தான் தரப்பில் இந்திய ராணுவம் பொதுமக்கள் பகுதியில் தாக்குதல் நடத்தியதாக சிலர், சில புகைப்படங்களை ஆதாரமாகப் பகிர்ந்தனர்.

இதுதொடர்பாக, இந்திய ராணுவத்தில் ஓய்வுபெற்ற ராணுவ மேஜர் கெளரவ் ஆர்யா தன்னுடைய ட்விட்டர் பதிவில், பாகிஸ்தானியர்கள் பகிர்ந்த படத்தை ஷேர் செய்து, “இந்திய ராணுவம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இருக்கும் மக்கள் மீது தாக்குதல் நடத்துவதாக பொய்ப் பிரசாரத்தைப் பரப்பி வருகிறது. அதற்கு ஆதாரமாக அவர்கள் ஒரு சில புகைப்படங்களையும் பரப்பி வருகின்றனர். அவர்கள் வெளியிட்ட இந்தப் புகைப்படத்தை சற்று கூர்ந்து கவனியுங்கள்.

அங்கு காட்டியிருக்கும் புகைப்படத்தில் இருக்கும் வெடிகுண்டில், பி.ஓ.எஃப் என்று உள்ளது. அதாவது பாகிஸ்தான் ராணுவ தளவாடங்கள் தயாரிப்பு தொழிற்சாலை என்று அர்த்தம். யாராவது பாகிஸ்தான் ராணுவத்துக்கு தங்களின் வீட்டுப் பாடத்தை சரியாகச் சொல்லுங்கள். தங்கள் நாட்டு மக்கள் மீதே தாக்குதல் நடத்துவது என்பது சரியான நடைமுறை கிடையாது” எனப் பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

Topics

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

Entertainment News

Popular Categories