இரண்டு ரூபாய்க்காக ஒரு கொலை!

Published:

murder 1 - 2026

கிழக்கு கோதாவரி மாவட்டம் காகிநாடா மண்டலம் வலசபாக்கம் கிராமத்தில் இந்த கொடூரம் நடந்துள்ளது.

இரண்டு ரூபாய்க்காக இருவர் இடையே நடந்த வாக்குவாதம் ஒரு மனிதனின் கொலைக்கு காரணமாகி உள்ளது.

சுவர்ண ராஜூ என்பவர் சைக்கிளில் காற்று நிரப்புவதற்காக வலசபாக்கத்திலுள்ள சாம்பா என்பவரின் சைக்கிள் கடைக்கு சென்றார். சைக்கிளில் காற்று நிரப்பிய பின் சாம்பா 2 ரூபாய் கொடுக்க வேண்டும் என சுவர்ணராஜுவிடம் கேட்டுள்ளார்.

அதனால் கோபமடைந்த சுவர்ணராஜு, சைக்கிள் கடைக்காரர் சாம்பாவை அடித்தார். அந்த நேரத்தில் அங்கிருந்த சாம்பாவின் நண்பர் அப்பாராவு, சுவர்ணராஜுவை கத்தியால் குத்தி விட்டார் என்று உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர்.

காயம்பட்டவரை உடனே காகிநாடா அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img