புது தில்லி: ரயில்வே சொத்துக்களுக்கு பாதுகாப்பு வழங்கும் பொருட்டு, ஆர்.பி.எப்., எனப்படும் ரயில்வே பாதுகாப்பு படை, மத்திய அரசால் உருவாக்கப்பட்டது.
இது, இந்திய ரயில்வே பாதுகாப்பு படை என, பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, ஆர்.பி.எப்., பிரிவு இனி, ஐ.ஆர்.பி.எப்.எஸ்., என அழைக்கப்பட உள்ளது.
ரயில்வே துறை தனது பாதுகாப்பு அமைப்பான ரயில்வே பாதுகாப்புப் படையின் பெயரை, இந்திய ரயில்வே பாதுகாப்பு படை சேவை என்று மாற்றி உள்ளது. நீதிமன்றத்தின் உத்தரவுப் படி, மத்திய அமைச்சரவை ஒப்புதலுடன், அந்தப் படைக்கு அமைப்பு ரீதியான குழு ஏ அந்தஸ்தை ரயில்வே அமைச்சகம் அளித்துள்ளது. இதற்கான அரசாணையும் பிறப்பிக்கப் பட்டுள்ளது.