December 6, 2025, 6:02 AM
23.8 C
Chennai

கிளப்பில் ஆபாச நடனம்! 21 இளம் பெண்கள் சிக்கினர்!

dance - 2025

கிளப்பில் ஆபாச நடனம் ஆடிய 21 இளம்பெண்கள் போலீசாரிடம் சிக்கினர். தப்பி ஓடிய கிளப் உரிமையாளர் உள்பட 2 பேரை தேடி வருகின்றனர்.

தெலங்கானா மாநிலம், ஐதராபாத்தில் உள்ள ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் உள்ள கிளப்பில் பெண்களை வைத்து ஆபாச நடனம் நடப்பதாக காவல்துறையினர்க்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் அவர்கள் நேற்று கிளப்புக்கு விரைந்து சென்றனர். அப்போது இளம்பெண்கள் பாடலுக்கு ஏற்றபடி ஆபாசமாக நடனமாடி கொண்டிருந்தனர்.

இதை காவல்துறியினர் தடுத்து நிறுத்தினர். 21 இளம்பெண்கள் பிடிபட்டனர். காவல்துறையினர் வருவதை பார்த்த சில பெண்கள், தப்பி ஓடினர். பிடிபட்டவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

தகவலறிந்து தொலைக்காட்சி சேனல்களின் வீடியோகிராபர்கள், பத்திரிகை போட்டோகிராபர்கள் வந்து, இளம்பெண்களை போட்டோ மற்றும் வீடியோ எடுத்தனர். இளம்பெண்கள் ஆவேசமடைந்து, வீடியோ எடுக்கக்கூடாது என்று கூச்சலிட்டு கேமராக்களை பறித்தனர்.

மேலும் செல்போனில் வீடியோ எடுத்த ஒரு வீடியோகிராபரின் செல்போனை தரையில் போட்டு உடைத்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து கேமராக்களை பறித்து வீடியோகிராபர்களிடம் காவல்துறையினர் திருப்பி கொடுத்தனர். மேலும் 21 பேரை ஜூப்ளி ஹில்ஸ் காவல் நிலையம் அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர்.

இதில் கேளிக்கை விருந்து ஒன்றிற்காக தங்களை பிரசாத் என்பவர் அழைத்து வந்து நடனமாட வைத்ததாக தெரிவித்தனர்.

இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கிளப் உரிமையாளர், அந்த கிளப்பை ஒரு நாளைக்கு வாடகைக்கு எடுத்து கேளிக்கை விருந்து நடத்திய பிரசாத் ஆகியோரை தேடி வருகின்றனர். மேலும் ஆபாச நடனம் ஆடிய இளம்பெண்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories