
ஃபைஸாபாத்:
உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள ஃபைஸாபாத் நகரில் நேற்று 22 முஸ்லிம்கள் ‘கர் வாப்ஸி’ மூலம் தாய் மதம் திரும்பினர். குழந்தைகள், பெண்கள் உட்பட அம்பேத்கர் நகர் மாவட்டத்தைச் சேர்ந்த 22 முஸ்லிம்கள் இந்து மதம் திரும்பினர்.
இவ்வாறு இந்து மதத்துக்குத் திரும்பியவர்களின் முன்னோர்கள் இந்துக்கள் எனவும், ஏதோ சில காரணங்களால் அவர்கள் 20-25 வருடங்களுக்கு முன் முஸ்லிம் மதத்தைத் தழுவியதாகவும் கூறப்படுகிறது.
ஆர்ய சமாஜத்தின் கோவிலில் நடைபெற்ற இந்நிகழ்வு கடைசி வரை ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. முறையான சடங்குகள் முடிந்த பின்னர் அவர்களுக்கு இந்து மதச் சிறப்புகள் குறித்து எடுத்துக் கூறப்பட்டது. ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்த கைலாஷ் சந்திர ஸ்ரீவத்சவா தலைமை வகித்துப் பேசிய போது, ”இஸ்லாத்தில் இருந்து எந்த ஆதாயத்தையும் எதிர்பார்க்காமல் அவர்கள் இந்து மதத்துக்குத் திரும்பினர்” என்று கூறினார்.



