December 5, 2025, 9:34 PM
26.6 C
Chennai

ஜிஎஸ்டி அமலாகும் ஜூலை 1-க்கு முன் விலை உயர்த்தினால் நடவடிக்கை: மத்திய அரசு எச்சரிக்கை

gst - 2025

புதுதில்லி :

‘ஜி.எஸ்.டி., வரிவிதிப்பு முறை அமலாகும் ஜூலை 1ம் தேதிக்கு முன்பாக, பொருட்கள் விலையை உயர்த்தும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என, மத்திய வருவாய் துறை செயலர் ஹஷ்முக் அதியா எச்சரித்துள்ளார்.

நாடு முழுவதும் வரும் ஜூலை 1 ஆம் தேதி முதல், ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி அமலுக்கு வருகிறது. இதுவரை 1,200 பொருட்கள் மற்றும் 500 வகையான சேவைகளுக்கு 5, 12, 18 மற்றும் 28 சதவீதம் என, நான்கு வித வரி விகிதங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் சேவைகள் வரி, தற்போதைய 15 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக உயர்கிறது. இருப்பினும், சேவை நிறுவனங்கள், மூலப்பொருட்களுக்கு செலுத்திய வரியை திரும்பப் பெறும் என்பதால் தற்போதைய அளவிலேயே வரி விகிதம் இருக்கும். இந்நிலையில் சில நிறுவனங்கள் லாபம் ஈட்டும் நோக்கில் விலையை உயர்த்தியுள்ளதாக மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.

இதுகுறித்து, வருவாய்த் துறைச் செயலர் ஹஷ்முக் அதியா செய்தியாளர்களிடம் தெரிவித்தபோது,

ஜி.எஸ்.டி., சட்டத்தின்படி, வரி குறைக்கப்பட்டால் அதன் பலனை நிறுவனங்கள் நுகர்வோருக்கு வழங்க வேண்டும். அவ்வாறு பலன்கள் வழங்கப்படுகிறதா என்பதைக் கண்காணிக்க லாப தடுப்பு ஆணையம் அமைக்கவும் சட்டத்தில் வகை செய்யப்பட்டுள்ளது. எனவே ஜி.எஸ்.டி., அமலுக்கு வரும் வரை நிறுவனங்கள் அவற்றின் தயாரிப்புப் பொருட்கள், சேவைகள் ஆகியவற்றுக்கான விலையை உயர்த்த வேண்டாம். சமாளிக்க முடியாத நிலை ஏற்பட்டால் மட்டுமே மூலப்பொருள்களின் விலை உயர்வு குறித்து நிறுவனங்கள் யோசிக்கலாம். அவ்வாறு இல்லாமல், லாப நோக்கத்தில் விலையை உயர்த்தினால், அந்நிறுவனங்களின் செயல்பாடுகள், நிதி நிலை அறிக்கைகள் ஆகியவை குறித்து லாப தடுப்பு ஆணையம் விசாரித்து, உரிய நடவடிக்கை மேற்கொள்ளும். சரக்கு மற்றும் சேவை வரி அமல்படுத்தப்பட்டால், பல பொருட்களின் விலை குறையும். குறிப்பாக, உணவு தானியங்கள் பூஜ்ஜிய வரியின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன என்று அவர் கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories