ஜூன் 8 முதல்… திருப்பதியில் சுவாமி தரிசனத்துக்கு ஏற்பாடு!

Published:

11 Sep12 Thirupathi
11 Sep12 Thirupathi
  • திருமலை ஸ்ரீவாரி தரிசனத்திற்கு அரசாங்கம் கிரீன் சிக்னல்.
  • ஜூன் 8 ம் தேதி மீண்டும் திறக்கப் போகும் திருமலைக்கோவில்.

உயிர்க்கொல்லி கரோனா வைரஸ் காரணமாக இரண்டு மாதங்களுக்கு மேலாக மூடியிருந்த திருமலா திருப்பதி தேவஸ்தானம் மீண்டும் திறக்கப் போகிறது. திருமலையில் ஸ்ரீவாரி தரிசனத்திற்கு ஆந்திரப் பிரதேசம் மாநில அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது.

வைரஸ் காரணமாக 6 அடி தூரம் மனித இடைவெளி கடைபிடித்து பக்தர்கள் தரிசனம் செய்து கொள்ளலாம் என்று அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதேபோல் திதிதே ஊழியர்கள் உள்ளூர் மக்களோடு டிரயல் ரன் நடத்துவதற்கு அரசாங்கம் கிரீன் சிக்னல் அளித்துள்ளது. இதன்படி திதிதே ஈவோ எழுதிய கடிதத்திற்கு செவ்வாய்க்கிழமை மாநில அரசாங்கம் பதிலளித்துள்ளது.

லாக்டௌன் நிபந்தனைகளை கடைபிடித்தபடி ஶ்ரீவாரி தரிசனத்துக்கு அனுமதி அளித்து அரசாங்க பிரத்தியேக முக்கிய காரியதரிசி ஜெஎஸ்வி பிரசாத் செவ்வாயன்று உத்தரவுகள் வெளியிட்டுள்ளார்.

லாக்டௌன் நிபந்தனைகளை கடைபிடித்தபடி ஸ்ரீவாரி தரிசனத்தை தொடரலாம் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது. அரசாங்க நிர்ணயத்தின்படி பக்தர்களின் வருகையை கவனத்தில் கொண்டு திதிதே அதிகாரிகள் ஏற்பாடுகள் செய்து வருகிறார்கள். வைரஸ் பரவல் காரணமாக மார்ச் 20ஆம் தேதி ஸ்ரீவாரி தரிசனத்தை நிறுத்தி வைத்தது குறிப்பிடத் தக்கது.

ALSO READ:  வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!
ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img