புது தில்லி:
நில ஆவணங்களுடன் ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும்; அவ்வாறு ஆதார் எண் இணைக்காதவர்கள் மீது பினாமி பணபரிவர்த்தனை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு கூறியுள்ளது.
இது தொடர்பாக மாநில தலைமைச் செயலாளர்களுக்கு மத்திய அரசு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
• நில ஆவணங்களோடு ஆதார் எண்ணை உரிமையாளர்கள் கட்டாயம் இணைக்க வேண்டும்
• ஆதார் எண் இணைக்காவிடில் பினாமி பண பரிவர்த்தனையின் கீழ் சட்டப்படி நடவடிக்கை
• 1950ம் ஆண்டு முதலான ஆவணங்களை டிஜிட்டல் மயமாக்க வேண்டும்
• ஆகஸ்ட் 14ம் தேதிக்குள் நில ஆவணங்களை டிஜிட்டல் மயமாக்க வேண்டும்
• மத்திய அரசின் மானியங்களை பெற ஆதார் எண் அவசியம்
• மதிய உணவு முதல் வங்கிக் கணக்கு வரை ஆதார் எண் இணைக்கப் பட வேண்டும்.
• ரியல்எஸ்டேட் துறையில் அதிக கறுப்பு பணப் புழக்கத்தை கருத்தில் கொண்டு, நிலம் வாங்குபவர்கள், விற்பனை செய்பவர்கள் தங்கள் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்
இவ்வாறு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
To Read this news article in other Bharathiya Languages
நில ஆவணங்களுக்கு கட்டாயமாகிறது ஆதார்: இணைக்காவிடில் பினாமி சட்டத்தில் நடவடிக்கை!
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari