கொரோனா: காங்கிரஸ் எம்.பி., வசந்தகுமார் காலமானார்!

vasanthakumar
vasanthakumar

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்பி வசந்தகுமார் இன்று காலமானார். மூச்சுத்திணறல் அதிகரித்த நிலையில் உடல்நலம் மோசமடைந்து இன்று மாலை அவரது உயிர் பிரிந்தது.

கன்னியாகுமரி காங்கிரஸ் எம்.பி வசந்தகுமார், கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவருக்கு அளிக்கப் பட்ட சிகிச்சை  பலனளிக்காத நிலையில், இன்று மாலை அவரது உயிர்பிரிந்தது. சென்னை கிரீம்ஸ் சாலை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் வசந்தகுமார். காங்கிரஸ் தொகுதியின் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்தவர். இருமுறை சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார்.  அவருக்கு தற்போது வயது 70.

vote vasanthakumar
vote vasanthakumar

கொரோனா பாதிப்பு காரணமாக ஆக.10ம் தேதி  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்த கன்னியாகுமரி எம்.பி., வசந்தகுமார் உடல்நிலை மோசமடைந்தது. இன்று காலையில் அவரது உடல் நிலை மீண்டும் கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வௌியானது.

கடந்த வாரம்  வசந்தகுமார் உடல்நிலை சீராக இருப்பதாக கூறப்பட்ட நிலையில் அவருக்கு தொடர்ந்து காய்ச்சல் அதிகமாக இருப்பதாகவும் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாகவும் மருத்துவமனை நிர்வாகம் இன்று காலை தகவல் தெரிவித்தது. வசந்தகுமாரின் மகனும் நடிகருமான விஜய் வசந்த் அதுவரை மருத்துவமனையில் உடன் இருந்தார். 

இன்று காலமான வசந்தகுமார், முதுபெரும் காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தனின் சகோதரர் என்பதும், தற்போதைய தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசையின் சிறிய தந்தை என்பதும் குறிப்பிடத் தக்கது. இந்நிலையில், வசந்த்குமாரின் இறுதிச் சடங்கில் பங்கேற்க அவரும் தமிழகம் வரக்கூடும் என்று கூறப் படுகிறது. 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

Topics

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories