தனிமைப்படுத்தப்பட்ட பெண் பாலியல் வன்கொடுமை! சுகாதார ஆய்வாளர் கைது!

vankodumai

கேரளத்தில், தனிமைப்படுத்தப்பட்ட மேலும் ஒரு பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகப் புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக சுகாதார ஆய்வாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கேரளத்தின் பத்தனம்திட்டா மாவட்டத்தில் கொரோனா தொற்று உறுதியாகி, சனிக்கிழமை இரவு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸில் சென்ற 19 வயது பெண்ணைக் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாக அதன் ஓட்டுநர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் மேலும் ஒரு பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகப் புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக பாங்கோடு காவல் நிலைய அதிகாரி ஒருவர் கூறியது:

குளத்துப்புழையைச் சேர்ந்த 44 வயது பெண், மலப்புரத்தில் வீட்டு செவிலியராகப் பணியாற்றி வந்தார்.

அண்மையில் சொந்த ஊருக்குத் திரும்பிய அவரை தனிமைப்படுத்திக் கொள்ளும்படி, அப்பகுதி ஆரம்ப சுகாதார நிலையத்தின் இளநிலை சுகாதார ஆய்வாளர் அறிவுறுத்தினார்.

அந்தப் பெண்ணுக்கு நோய்த் தொற்று பரிசோதனை மேற்கொண்டதில் முடிவு எதிர்மறையாக வந்தது. இது தொடர்பான சான்றிதழை பரதனூரில் உள்ள தனது வீட்டுக்கு வந்து பெற்றுக்கொள்ளும்படி சுகாதார ஆய்வாளர் கூறியதன் பேரில், கடந்த 3 ஆம் தேதி அவரது வீட்டுக்குச் சென்றார் அந்தப் பெண்.

அப்போது தன்னைக் கட்டிவைத்து சுகாதார ஆய்வாளர் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், அடுத்த நாள் தன்னை விடுவித்ததாகவும் புகாரில் கூறியுள்ளார் அந்தப் பெண்.

இதைத் தொடர்ந்து சுகாதார ஆய்வாளர் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டார். அவர் மீது பாலியல் வன்கொடுமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு காவல் நிலைய அதிகாரி கூறினார்.

இதற்கிடையே இந்த சம்பவம் தொடர்பாக மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்துள்ளது. சம்பந்தப்பட்ட சுகாதார ஆய்வாளர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும்படி, மாநில சுகாதாரத் துறை செயலருக்கு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

பாலியல் வன்கொடுமை சம்பவங்களுக்கு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இரண்டு சம்பவங்களாலும் மாநிலத்துக்குப் பெருத்த அவமானம் ஏற்பட்டுள்ளது என்று அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

ஜனநாயகன் – விளக்கம் கொடுத்த சென்சார் போர்ட்; யார் பார்த்த வேலை இது?

தணிக்கை சான்றிதழ் வேண்டி சமர்ப்பிக்கப்படும் அனைத்து திரைப்படங்களுக்கும் KDM எனப்படும் ஒரு பாதுகாப்பான முறையை திரைப்பட தணிக்கை வாரியம் பின்பற்றுகிறது.

ஜனநாயகன் படம் இணையத்தில் கசிந்தது, திட்டமிடப்பட்ட செயலா?

பெரிய படங்கள் இணையத்தில் கசிவது புதிய விஷயம் அல்ல. ஆனால், “ஜனநாயகன்” திரைப்படம் முழுமையாக லீக் ஆனதாக கூறப்படும் இந்தச் சம்பவம், வழக்கமான Piracy நிகழ்வுகளிலிருந்து மாறுபட்டதாக பார்க்கப்படுகிறது.

சமூகத்தை அச்சுறுத்தும் ‘டேட்டிங்’ செயலிகளை தடை செய்ய வேண்டும்!

தனிநபர் வாழ்க்கையும் சமூக அமைப்பும் பாதிக்கப்படும் பிரச்சினையாக இது மாறும் அபாயம் மறுக்க முடியாத ஒன்று; தனிநபர் விருப்பம் என்ற பெயரில் பரவும் சீரழிவுகள், சமூக அமைப்பையே சீர்குலைக்கும்

‘அருந்தமிழ் 50’ நூல் வெளியீடு

சாரல் ஆங்கில துணை இதழ் ஆசிரியர் ஜெயஸ்ரீ எம். சாரி எழுதிய கவிதை தொகுப்பான அருந்தமிழ் 50 என்ற நூலை திருவான்மியூரில் உள்ள இலக்கியச் சாரல்

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

ஜனநாயகன் – விளக்கம் கொடுத்த சென்சார் போர்ட்; யார் பார்த்த வேலை இது?

தணிக்கை சான்றிதழ் வேண்டி சமர்ப்பிக்கப்படும் அனைத்து திரைப்படங்களுக்கும் KDM எனப்படும் ஒரு பாதுகாப்பான முறையை திரைப்பட தணிக்கை வாரியம் பின்பற்றுகிறது.

ஜனநாயகன் படம் இணையத்தில் கசிந்தது, திட்டமிடப்பட்ட செயலா?

பெரிய படங்கள் இணையத்தில் கசிவது புதிய விஷயம் அல்ல. ஆனால், “ஜனநாயகன்” திரைப்படம் முழுமையாக லீக் ஆனதாக கூறப்படும் இந்தச் சம்பவம், வழக்கமான Piracy நிகழ்வுகளிலிருந்து மாறுபட்டதாக பார்க்கப்படுகிறது.

சமூகத்தை அச்சுறுத்தும் ‘டேட்டிங்’ செயலிகளை தடை செய்ய வேண்டும்!

தனிநபர் வாழ்க்கையும் சமூக அமைப்பும் பாதிக்கப்படும் பிரச்சினையாக இது மாறும் அபாயம் மறுக்க முடியாத ஒன்று; தனிநபர் விருப்பம் என்ற பெயரில் பரவும் சீரழிவுகள், சமூக அமைப்பையே சீர்குலைக்கும்

‘அருந்தமிழ் 50’ நூல் வெளியீடு

சாரல் ஆங்கில துணை இதழ் ஆசிரியர் ஜெயஸ்ரீ எம். சாரி எழுதிய கவிதை தொகுப்பான அருந்தமிழ் 50 என்ற நூலை திருவான்மியூரில் உள்ள இலக்கியச் சாரல்

இலக்கியச் சாரலின் மனங்களை வென்ற காவியக் கன்றுகள்!

இலக்கியச் சாரல் ஆசிரியர் ரெ.முரளி மற்றும் ஆங்கில இதழ் ஆசிரியர் ஜெயஶ்ரீ சாரி ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்தனர். ஜானகி குமரேசன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க, ரேவதி ஸ்ரீநிவாசன் நன்றியுரை நிகழ்த்தினார்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 11 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

போர்ச் சூழலிலும், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நிலையாக இருக்கும்!

மேற்காசியப் போர் நிமித்தம் கொஞ்சம் பாதிப்பு இருந்தாலும், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.6% என நிலையாக இருக்கும்.

Entertainment News

Popular Categories