இன்று… காவலர் வீர வணக்க நாள்: தலைவர்கள் மரியாதை!

modiji-1

காவலர் வீரவணக்க நாள் : தேசத்திற்கான சேவையின் போது தன்னுயிர் ஈந்த காவல்துறை தியாகிகளுக்கும், அவர்கள் குடும்பத்திற்கும் நன்றி செலுத்துகிறோம்! அவர்களின் தியாகமும், சேவையும் இந்திய மக்களின் நினைவில் நீங்காமல் இருக்கும்! என்று பிரதமர் மோடி தனது டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

இன்று, நாடு முழுதும் காவலர் வீரவணக்க நாள் கடைப்பிடிக்கப் படுகிறது. இதை முன்னிட்டு நாடு முழுவதும் பணியின் போது உயிர்த்தியாகம் செய்த போலீசாருக்கு தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.

காஷ்மீர், லடாக் பகுதியில் 1959 அக்.21ல் சீன ராணுவத்தினர் தாக்குதல் நடத்தியதில் நம் துணை ராணுவப் படையினர் 10 பேர் வீரமரணம் அடைந்தனர். அவர்களின் நினைவாக அக்.21 ஆம் தேதி, காவலர் வீரவணக்க நாளாக அனுசரிக்கப்படுகிறது. இந்த தினத்தில், பணியின் போது உயிர் நீத்த போலீசாருக்கு, துப்பாக்கிக் குண்டுகள் முழங்க அஞ்சலி செலுத்தப்படும். உயர் அதிகாரிகள் உட்பட போலீசார் அனைவரும், கைகளில் கறுப்புப் பட்டை அணிகின்றனர். 

ALSO READ:  மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!
police-vanakka-day

காவலர் வீரவணக்க நாளை முன்னிட்டு பிரதமர் மோடி டிவிட்டரில் செய்தி வெளியிட்டுள்ளார். அதில், 

நாடு முழுவதும் உள்ள நமது போலீஸாருக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் நன்றி தெரிவிப்பதே காவலர் நினைவு நாள். கடமையின்போது, உயிர்த்தியாகம் செய்த அனைத்து போலீஸாருக்கும் நாம் மரியாதை செலுத்துகிறோம். அவர்களின் தியாகமும் சேவையும் எப்போதும் நினைவில் இருக்கும். 

நாட்டில் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதில் இருந்து கொடூரமான குற்றங்களுக்கு தீர்வு காண்பது வரை, பேரழிவு காலத்தில் உதவி செய்வதில் இருந்து கொரோனாவுக்கு எதிராக போராடுவதை வரை நமது போலீசார் எப்போதும் சிறப்பான சேவை செய்கின்றனர். பொது மக்களுக்கு உதவ எப்போதும் தயார் நிலையில் இருக்கும் போலீஸார் குறித்து பெருமை கொள்வோம் என்று தெரிவித்துள்ளார்.

ALSO READ:  ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

காவலர் வீரவணக்க நாளை முன்னிட்டு நாடு முழுதும் முதலமைச்சர்கள் இது தொடர்பான நிகழ்ச்சிகளில் பங்கேற்று, அஞ்சலி செலுத்தினர். முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட டிவிட்டர் பதிவில்… தங்கள் குடும்பத்தினர் நலனைக்காட்டிலும், பொதுமக்களின் நலனே முக்கியம்” எனும் உயர்ந்த நோக்கில், விடுமுறை தினங்கள் இல்லாமல் தங்கள் வாழ்வியலை பொதுமக்களுக்காக அர்ப்பணிக்கும் காவல்துறை நண்பர்களுக்கு தேசிய காவலர்கள் நினைவு தினத்தில் எனது சிரம் தாழ்ந்த வணக்கங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

சென்னை டிஜிபி அலுவலகத்தில் உள்ள நினைவு சின்னத்தில் டிஜிபி திரிபாதி மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வாலும் அஞ்சலி செலுத்தினார்.

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : நாகாலாந்து
https://twitter.com/copmahesh1994/status/1318792119314624513

மாவட்டங்களில் அந்த அந்த மாவட்டக் கண்காணிப்பாளர்கள் அஞ்சலி செலுத்தினர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

Topics

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

Entertainment News

Popular Categories