ரயிலில் டீ வாங்கிக் கொடுத்த மர்ம நபர்கள்! பணம், நகை,செல்போன் கொள்ளை!

train 1
train 1

நாகர்கோவில் வந்த ரயிலில் தொழிலாளரிடம் நகை பறித்த மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள உன்னாவ் மாவட்டத்தை சேர்ந்தவர் தொழிலாளி வினோத் குமார்.

இவருடைய மகன் நெல்லை மாவட்டத்திலுள்ள கல்லிடைக்குறிச்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால் அவரை பார்ப்பதற்காக வினோத்குமார் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்துள்ளார்.

இந்நிலையில் அந்த ரயிலில் பயணம் செய்த இரண்டு நபர்கள் தாம்பரத்தில் வினோத் குமாருக்கு டீ வாங்கி கொடுத்துள்ளார்கள். அதை டீயை வினோத்குமார் வாங்கி குடித்தவுடன் மயங்கி கீழே விழுந்தார்.

இதனையடுத்து அந்த மர்ம நபர்கள் அவரிடம் இருந்த 27 ஆயிரம் ரூபாய் பணம் , அவர் அணிந்திருந்த அரை பவுன் மோதிரம் மற்றும் கைபேசி ஆகியவற்றை கொள்ளையடித்துவிட்டு சென்றனர்.

vinothkumar
vinothkumar

அதன்பின் ரயிலானது நாகர்கோவில் கோட்டார் ரயில் நிலையத்தில் வந்து நின்றதும் வினோத் குமாருக்கு மயக்கம் தெளிந்து கண் விழித்துப் பார்த்துள்ளார். அப்போது அவரிடம் இருந்த நகை, பணம், மற்றும் கைபேசி போன்றவை திருட்டு போனதை அறிந்து அதிர்ச்சியடைந்தார்.

இதனையடுத்து அருகில் உள்ள காவல் நிலையத்தில் வினோத்குமார் புகார் அளித்தார். அந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து விட்டு சென்ற அந்த 2 மர்ம நபர்கள் நாக்பூரைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. எனவே காவல்துறையினர் அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.27 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ஹைதராபாத் தூத்துக்குடி இடையே நேரடி ரயில் சேவை; திருவண்ணாமலை வழி!

ரயில்வே வாரியம் இதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. அதற்கான அறிவிப்புகளை மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வெளியிட்டுள்ளார்.

தேசத்துக்கு அவப்பெயர் ஏற்படுத்துவதிலேயே குறியாக இருக்கும் காங்கிரஸ்!

ஏற்கெனவே நீங்கள் அம்மணக்கட்டைகள் தான் என்பது தேசத்திற்கு நன்கு தெரியும். பிறகு உடைகளை அவிழ்த்துப் போட என்ன அவசியம்? 

ஆன்றோர்கள் தேசமடி பாப்பா

ஆன்மீகத்தை கையில் எடுத்தாலும் அதன்மூலம் சமூகநீதியை பரப்பிய ஸ்ரீ ராமானுஜரை தன் மடியில் வைத்துக் கொண்டாடிய தேசமடி பாப்பா நம் பாரத கண்டம்.

பஞ்சாங்கம் பிப்.24 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் பிப்.27 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ஹைதராபாத் தூத்துக்குடி இடையே நேரடி ரயில் சேவை; திருவண்ணாமலை வழி!

ரயில்வே வாரியம் இதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. அதற்கான அறிவிப்புகளை மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வெளியிட்டுள்ளார்.

தேசத்துக்கு அவப்பெயர் ஏற்படுத்துவதிலேயே குறியாக இருக்கும் காங்கிரஸ்!

ஏற்கெனவே நீங்கள் அம்மணக்கட்டைகள் தான் என்பது தேசத்திற்கு நன்கு தெரியும். பிறகு உடைகளை அவிழ்த்துப் போட என்ன அவசியம்? 

ஆன்றோர்கள் தேசமடி பாப்பா

ஆன்மீகத்தை கையில் எடுத்தாலும் அதன்மூலம் சமூகநீதியை பரப்பிய ஸ்ரீ ராமானுஜரை தன் மடியில் வைத்துக் கொண்டாடிய தேசமடி பாப்பா நம் பாரத கண்டம்.

பஞ்சாங்கம் பிப்.24 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

T20 WC2026: சூப்பர் 8 பிரிவில் சூப்பர் ஆட்டங்கள்

ஆண்கள் டி20 உலகக் கோப்பைப் போட்டி சூப்ப்ர் 8 ஆட்டங்கள் 23.02.2026

இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு: தமிழகம் முழுதும்!

தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்ட ஆட்சியர்களால் இறுதி வாக்களார் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.  எஸ்ஐஆர் பணி முடிந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும்

பஞ்சாங்கம் பிப்.23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories