December 6, 2025, 9:14 AM
26.8 C
Chennai

மே, ஜூன் இல் 5 கிலோ தானியங்கள் இலவசம்! மத்திய அரசு அறிவிப்பு!

pmmodi
pmmodi

பிரதமரின் கரீப் கல்யாண் திட்டத்தில் மே, ஜூன் மாதத்திற்கு 5 கிலோ தானியங்கள் இலவசமாக விநியோகிக்க பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.

கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக ஏற்பட்டுள்ள சிரமத்தை குறைக்கும் வகையில் இலவச தானியங்கள் விநியோகம் செய்யப்பட உள்ளது. ரூ.26,000 கோடி செலவில் உணவு தானியங்கள் வழங்குவதன் மூலம் 80 கோடி பேர் பயனடைவர் என்று மோடி தெரிவித்துள்ளார்.

பொது விநியோக திட்டத்தின் கீழ் 2 மாதங்கள் தலா 5 கிலோ தானியங்கள் இலவசமாக விநியோகிக்கப்பட உள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பு மிகவும் அதிகமாக இருப்பதால் சென்ற வருடம் நிவாரணம் அளிக்கப்பட்டதை போல் இந்த வருடமும் நிவாரணம் அளிக்க பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.

சுமார் 80 கோடி மக்கள் பயன்பெறும் வகையில் 5 கிலோ உணவு தானியங்களை மே மற்றும் ஜூன் மாதங்களுக்கு வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

ரேஷன் கடைகள் மூலமாக இந்த உணவு தானியங்கள் இலவசமாக விநியோகிக்கப்படும். மாநிலங்களுக்கு இதுகுறித்து தகவல் அனுப்பப்பட்டு உள்ளது.

சென்ற வருடம் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்த போது வாழ்வாதாரம் இழந்து வாடும் மக்களுக்கு மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையிலே அரசு நடவடிக்கை எடுத்ததோ அதேபோலவே இந்த முறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

இதற்காக ரூ.26,000 கோடி ஒதுக்கீடு செய்யவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஏழை மக்கள், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள், வாழ்வாதாரத்தை இழந்தவர்கள் மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ஓரளவிற்கு ஆறுதல் அளிக்கும் விசயமாக இருக்க வேண்டும் என இந்த நடவடிக்கையை மத்திய அரசு எடுத்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories