கொரோனா: தனி விமானம் மூலம் தப்பி ஓடும் பணக்காரர்கள்!

truejet44 1521953816
truejet44 1521953816

கொரோனா வைரஸ் தொற்றின் பாதிப்பு கிட்டத்தட்ட 3,50,000-த்தினை எட்டியுள்ளது. இதன்காரனமாக, இந்தியாவில் உள்ள பணக்காரர்கள் தனியார் ஜெட் விமானங்கள் மூலம் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்கின்றனர்.

நாடு முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை மிகத் தீவிரமாக பரவி வருகிறது.

இந்த நிலையில் இந்தியாவில் உள்ள பணக்காரர்கள் பலர், அதிக அளவில் பணம் செலவு செய்து ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு போன்ற சில நாடுகளுக்கு தனி விமானங்களை முன்பதிவு செய்து இந்தியாவில் இருந்து தப்பிச் செல்கின்றனர்.

இதுகுறித்து, புதுடெல்லியைச் சேர்ந்த தனியார் ஜெட் நிறுவனமான கிளப் ஒன் ஏர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ராஜன் மெஹ்ரா கூறுகையில்,”கொரோனா பரவல் காரணமாக கனடா, ஹாங்காங், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் யு.கே ஆகிய நாடுகள், இந்தியர்கள் தங்கள் நாட்டிற்கு வர தடைகளை விதித்துள்ளன.
மேலும், மற்ற நாடுகள் நடவடிக்கைகளை அறிவிக்க தயாராக உள்ளன.

இந்நிலையில், இந்தியாவில் இருக்கும் பணக்காரர்கள் அதிக அளவில் பணம் கொடுத்து, தனியார் ஜெட் விமானங்களை எடுத்துக் கொண்டு வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்கின்றனர். அதாவது,புது தில்லியில் இருந்து துபாய்க்கு விமானம் மூலம் சென்றால், தரை இறங்குதல் மற்றும் பிற கட்டணங்கள் உட்பட 1.5 மில்லியன் ரூபாய் ($ 20,000) செலவாகும்.

அதுமட்டுமல்லாமல், நாட்டின் சுகாதார உள்கட்டமைப்பு நெருக்கடியின் கீழ் உள்ளதால், பாலிவுட் திரைப்பட சூப்பர்ஸ்டார்கள் போன்றோர் மாலத்தீவு உள்ளிட்ட இடங்களுக்கு தப்பிச் செல்கின்றனர்.

மேலும், மூன்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் இந்தியன் பிரீமியர் லீக்கிலிருந்து விலகி அவரவர் சொந்த நாடுகளுக்கு திரும்பியுள்ளனர்”,என்று கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.27 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ஹைதராபாத் தூத்துக்குடி இடையே நேரடி ரயில் சேவை; திருவண்ணாமலை வழி!

ரயில்வே வாரியம் இதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. அதற்கான அறிவிப்புகளை மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வெளியிட்டுள்ளார்.

தேசத்துக்கு அவப்பெயர் ஏற்படுத்துவதிலேயே குறியாக இருக்கும் காங்கிரஸ்!

ஏற்கெனவே நீங்கள் அம்மணக்கட்டைகள் தான் என்பது தேசத்திற்கு நன்கு தெரியும். பிறகு உடைகளை அவிழ்த்துப் போட என்ன அவசியம்? 

ஆன்றோர்கள் தேசமடி பாப்பா

ஆன்மீகத்தை கையில் எடுத்தாலும் அதன்மூலம் சமூகநீதியை பரப்பிய ஸ்ரீ ராமானுஜரை தன் மடியில் வைத்துக் கொண்டாடிய தேசமடி பாப்பா நம் பாரத கண்டம்.

பஞ்சாங்கம் பிப்.24 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் பிப்.27 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ஹைதராபாத் தூத்துக்குடி இடையே நேரடி ரயில் சேவை; திருவண்ணாமலை வழி!

ரயில்வே வாரியம் இதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. அதற்கான அறிவிப்புகளை மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வெளியிட்டுள்ளார்.

தேசத்துக்கு அவப்பெயர் ஏற்படுத்துவதிலேயே குறியாக இருக்கும் காங்கிரஸ்!

ஏற்கெனவே நீங்கள் அம்மணக்கட்டைகள் தான் என்பது தேசத்திற்கு நன்கு தெரியும். பிறகு உடைகளை அவிழ்த்துப் போட என்ன அவசியம்? 

ஆன்றோர்கள் தேசமடி பாப்பா

ஆன்மீகத்தை கையில் எடுத்தாலும் அதன்மூலம் சமூகநீதியை பரப்பிய ஸ்ரீ ராமானுஜரை தன் மடியில் வைத்துக் கொண்டாடிய தேசமடி பாப்பா நம் பாரத கண்டம்.

பஞ்சாங்கம் பிப்.24 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

T20 WC2026: சூப்பர் 8 பிரிவில் சூப்பர் ஆட்டங்கள்

ஆண்கள் டி20 உலகக் கோப்பைப் போட்டி சூப்ப்ர் 8 ஆட்டங்கள் 23.02.2026

இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு: தமிழகம் முழுதும்!

தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்ட ஆட்சியர்களால் இறுதி வாக்களார் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.  எஸ்ஐஆர் பணி முடிந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும்

பஞ்சாங்கம் பிப்.23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories