உயிரிழந்த தாயோடு இரண்டு நாட்களாக உணவின்றி இருந்த குழந்தை!

baby
baby

மகாராஷ்டிராவில் தாய் இறந்ததால் 18 மாத குழந்தை ஒன்று 2 நாட்களாக உணவு இல்லாமல் தவித்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் பெண் ஒருவர் தனது 18 மாத குழந்தையுடன் வாடகை வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில் உடல்நலக்குறைவால் அந்த பெண் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு உயிரிழந்தார்.

வீட்டில் வேறு யாரும் இல்லததால் குழந்தை உணவு மற்றும் பால் இல்லாமல் இரண்டு நாட்களாக பரிதவித்துள்ளது.
இரண்டு நாட்களாக வீட்டிலிருந்து யாரும் வெளியே வராததால் வீட்டின் உரிமையாளர் உள்ளே சென்று பார்த்துள்ளார்.

அப்போது பெண் உயிரிழந்தது தெரிய வந்ததை அடுத்து, காவல் துறைக்கு தகவல் அளித்துள்ளார்.

இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொரோனா அச்சத்தால் அக்கம் பக்கத்தினர் யாரும் குழந்தைக்கு உதவ முன் வரவில்லை.

இதனிடையே அந்த குழந்தைக்கு காவலர் சுசிலா பொறுப்பேற்று உணவு வழங்கினார். இதையடுத்து காய்ச்சல் காரணமாக அந்த குழந்தைக்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு குழந்தைக்கு கொரோனா தொற்று பரிசோதனையும் செய்யப்பட்டது. அதில் தொற்று உறுதி செய்யப்படாததால் அவரை குழந்தைகள் காப்பகத்தில் தங்க வைத்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில், அந்த பெண் இறந்து 2 நாட்கள் ஆகியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

மேலும் அவர் கொரோனாவால் இறந்திருக்கிறாரா என்பது குறித்த தகவல் தெரியவில்லை என்று போலீசார் தெரிவித்தனர்.

அவரது கணவர் உத்தர பிரதேசத்தில் பணியாற்றிக்கொண்டிருப்பதாகவும், அவர் வருகைக்காக தாங்கள் காத்திருப்பதாகவும் இன்ஸ்பெக்டர் பிரகாஷ் ஜாவீத் கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.27 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ஹைதராபாத் தூத்துக்குடி இடையே நேரடி ரயில் சேவை; திருவண்ணாமலை வழி!

ரயில்வே வாரியம் இதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. அதற்கான அறிவிப்புகளை மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வெளியிட்டுள்ளார்.

தேசத்துக்கு அவப்பெயர் ஏற்படுத்துவதிலேயே குறியாக இருக்கும் காங்கிரஸ்!

ஏற்கெனவே நீங்கள் அம்மணக்கட்டைகள் தான் என்பது தேசத்திற்கு நன்கு தெரியும். பிறகு உடைகளை அவிழ்த்துப் போட என்ன அவசியம்? 

ஆன்றோர்கள் தேசமடி பாப்பா

ஆன்மீகத்தை கையில் எடுத்தாலும் அதன்மூலம் சமூகநீதியை பரப்பிய ஸ்ரீ ராமானுஜரை தன் மடியில் வைத்துக் கொண்டாடிய தேசமடி பாப்பா நம் பாரத கண்டம்.

பஞ்சாங்கம் பிப்.24 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் பிப்.27 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ஹைதராபாத் தூத்துக்குடி இடையே நேரடி ரயில் சேவை; திருவண்ணாமலை வழி!

ரயில்வே வாரியம் இதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. அதற்கான அறிவிப்புகளை மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வெளியிட்டுள்ளார்.

தேசத்துக்கு அவப்பெயர் ஏற்படுத்துவதிலேயே குறியாக இருக்கும் காங்கிரஸ்!

ஏற்கெனவே நீங்கள் அம்மணக்கட்டைகள் தான் என்பது தேசத்திற்கு நன்கு தெரியும். பிறகு உடைகளை அவிழ்த்துப் போட என்ன அவசியம்? 

ஆன்றோர்கள் தேசமடி பாப்பா

ஆன்மீகத்தை கையில் எடுத்தாலும் அதன்மூலம் சமூகநீதியை பரப்பிய ஸ்ரீ ராமானுஜரை தன் மடியில் வைத்துக் கொண்டாடிய தேசமடி பாப்பா நம் பாரத கண்டம்.

பஞ்சாங்கம் பிப்.24 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

T20 WC2026: சூப்பர் 8 பிரிவில் சூப்பர் ஆட்டங்கள்

ஆண்கள் டி20 உலகக் கோப்பைப் போட்டி சூப்ப்ர் 8 ஆட்டங்கள் 23.02.2026

இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு: தமிழகம் முழுதும்!

தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்ட ஆட்சியர்களால் இறுதி வாக்களார் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.  எஸ்ஐஆர் பணி முடிந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும்

பஞ்சாங்கம் பிப்.23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories