தப்பிவந்த காதல் ஜோடி! பிடித்து விமானத்தில் அனுப்பி வைத்த போலீஸ்!

Published:

flight
flight

ஓடி வந்த காதல் ஜோடி போலீசில் ஒப்படைக்கப்பட்ட நிலையில், அவர்கள் விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.

திரிபுரா மாநிலம், அகர்தலா பகுதியை சேர்ந்தவர் ரோபல் ஹோசீன். 22 வயது மதிக்கத்தக்க இவர் சென்னையில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் இவர் கடந்த ஆண்டு சொந்த ஊரான அகர்தலாவுக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு அதே பகுதியை சேர்ந்த முக்தா ராணி (18) என்ற இளம்பெண்ணுடன் நட்பு ஏற்பட்டுள்ளது.

இவர்களின் நட்பு நாளைடைவில் காதலாக மாற, இது குறித்து அந்த பெண்ணின் குடும்பத்திற்கு தெரியவர அவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதனால், இருவரும் நேற்று முன்தினம் வீட்டை விட்டு வெளியேறி சென்னை சென்றுள்ளனர். இது குறித்து அந்த பெண்ணின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் தெரிவிக்க, திர்புரா போலீசார் உடனடியாக சென்னை விமானநிலைய போலீசாருக்கு இது குறித்து தகவல் தெரிவித்துள்ளனர்.

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர தேரோட்டம் கோலாகலம்!

அதன் படி அங்கு தயாராக இருந்த சென்னை போலீசார், விமானத்தில் வந்த காதலர்களை பிடித்து வைத்துக்கொண்டு திரிபுரா போலீசாருக்கு தகவல் கொடுக்க, உடனடியாக சென்னைக்கு விரைந்து வந்த போலீசார், காதலர்கள் இருவரையும் திரிபுராவுக்கு விமானத்தில் அழைத்து சென்றனர்.

Related articles

Recent articles

spot_img