December 6, 2025, 8:55 PM
26.8 C
Chennai

கொரோனா: பிரபல பாடகர் மரணம்!

g anand
g anand

நாடு முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் இரண்டாம் அலையில் பல்வேறு திரைப்பிரபலங்கள் அடுத்தடுத்து உயிரிழந்து வருகின்றனர்.

தெலுங்கு சினிமாவில் பிரபலமான பின்னணிப் பாடகர் ஜி. ஆனந்த் சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டார்.

இதையடுத்து ஹைதராபாத்தில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் அவருக்கு உடலில் ஆக்சிஜன் அளவு மிகவும் குறைந்து போனது. இதனால் வெண்டிலேட்டர் உதவி தேவைப்பட்டது.

ஆனால் அந்நேரம் பார்த்து அவருக்கு மருத்துவமனையில் வெண்டிலேட்டர்கள் எதுவும் இல்லை. ஏற்கனவே இருந்தவற்றில் மற்ற நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதனால் அவருடைய உடல்நிலை மிகவும் கவலைக்கிடமானது.

உடனடியாக பாடகர் ஜி.ஆனந்தின் குடும்பத்தார் சமூகவலைதளங்கள் மூலமாக வெண்டிலேட்டர் உதவி கேட்டு பதிவிட்டனர். ஆனால் உரிய நேரத்தில் உதவி கிடைக்காததால் சிகிச்சை பலனின்றி அவர் மரணமடைந்தார்.

தெலுங்கு மற்றும் தமிழில் பல்வேறு படங்களில் பாடியுள்ள ஜி. ஆனந்துக்கு 64 வயதாகிறது. தெலுங்கில் வெளியான சில படங்களுக்கும் அவர் இசையமைத்துள்ளார்.

பல்வேறு பக்திப் பாடல்களை பாடி ஆடியோவாக வெளியிட்டுள்ளார். பாடகர் ஜி. ஆனந்த் மறைவுக்கு தெலுங்கு திரையுலகத்தினர் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories