
சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் பிரகாஷ்ராஜ் அறுவை சிகிச்சைக்காக ஹைதராபாத் செல்கிறார்.
பிரகாஷ்ராஜ் நேற்று தனது வீட்டில் சறுக்கி விழுந்த போது ஏற்பட்ட விபத்தில் காயம் அதிகம் ஏற்பட்டதால், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் .
அங்கு பிரகாஷ்ராஜை பரிசோதித்த மருத்துவர்கள், தோள்பட்டையில் சிறிய எலும்பு முறிவு ஏற்பட்டு இருக்கிறது என்று கூறினர். இதனையடுத்து அவருக்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
ஆனால் பிரகாஷ் ராஜ் தனது நண்பரும் டாக்டருமான ஹைதராபாத்தில் உள்ள குருவாரெட்டியவுடன் ஆலோசனை செய்ததில், அவர் அறுவை சிகிச்சை செய்வதாக சொல்லி நம்பிக்கை கொடுத்திருக்கிறார். இதை அடுத்து ஹைதராபாத்துக்கு சென்றிருக்கிறார் பிரகாஷ்ராஜ்.
அதுகுறித்து பிரகாஷ்ராஜ், ”ஒரு சிறிய வீழ்ச்சி .. ஒரு சிறிய எலும்பு முறிவு .. ஒரு அறுவை சிகிச்சைக்காக ஹைதராபாத் செல்கிறேன். எனது நண்பர் டாக்டர் குருவாரெட்டியின் பாதுகாப்பான கைகளில் அறுவை சிகிச்சை செய்துகொள்ள செல்கிறேன்” என்று தெரிவித்துள்ளவர்,
” நான் நன்றாக இருப்பேன். கவலைப்பட ஒன்றுமில்லை” என்று ரசிகர்களுக்கு ஆறுதல் சொல்லி இருக்கிறார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பிஸியான நடிகராக இப்போதும் வலம் வருகிறார் பிரகாஷ்ராஜ். இவர் தற்போது அண்ணாத்த, கேஜிஎப்-2, பொன்னியின் செல்வன், புஷ்பா, மாறன், திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார்.
A small fall.. a tiny fracture.. flying to Hyderabad into the safe hands of my friend Dr Guruvareddy for a surgery. I will be fine nothing to worry .. keep me in your thoughts 😊😊😊🤗🤗🤗
— Prakash Raj (@prakashraaj) August 10, 2021