காதலியை கொல்ல வாங்கிய புதிய கத்தி.. நடுரோட்டில் கழுத்தை அறுத்த காதலன்!

Venkatesh
Venkatesh

நடுரோட்டில் இளம்பெண் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரில் வசித்து வந்தவர் அனிதா (23).

இவரது சொந்த ஊர் ஆந்திர மாநிலம் ஆகும். பெங்களூருவில் தங்கி இருந்து தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். அதே நிறுவனத்தில் வெங்கடேஷ் (27) என்பவரும் வேலை பார்த்து வருகிறார்.

ஒரே நிறுவனத்தில் 2 பேரும் வேலை செய்ததால், அனிதாவுக்கும், வெங்கடேசுக்கும் இடையே காதல் மலர்ந்தது. இருவரும் உயிருக்கு உயிராக காதலித்து வந்துள்ளனர்.

வெங்கடேசை காதலிப்பது பற்றி தனது பெற்றோரிடம் கடந்த சில நாட்களுக்கு முன்பு அனிதா கூறியுள்ளார். ஆனால் அனிதாவை, வெங்கடேசுக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர் மறுத்து விட்டனர். அத்துடன் அனிதாவுக்கு வேறு மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைக்கவும் பெற்றோர் முடிவு செய்தார்கள்.

இதுபற்றி வெங்கடேசிடம் பேசிய அனிதா பெற்றோர் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்து விட்டதால், என்னை நீ மறந்துவிட்டு வேறு ஒரு பெண்ணை பார்த்து திருமணம் செய்து கொள் என கூறினார்.

இதன் காரணமாக ஆத்திரமடைந்த வெங்கடேஷ், நேற்று காலையில் வீட்டில் இருந்து அனிதா வேலைக்கு புறப்பட்டு சென்ற போது, அவரை பின்தொடர்ந்து சென்றுள்ளார். பின்னர் அனிதாவின் கழுத்தை கத்தியால் அறுத்து விட்டு வெங்கடேஷ் ஓடிவிட்டார்.

anitha
anitha

இதில், கழுத்து அறுக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய அவரை, அங்கிருந்தவர்கள் மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அனிதா பரிதாபமாக இறந்து விட்டார்.

இதுகுறித்து விசாரணை நடத்திய போலிசார் தலைமறைவாக இருந்த வெங்கடேசை கைது செய்துள்ளனர். அனிதாவை கொலை செய்ய ரூ.80-க்கு புதிதாக கத்தி ஒன்றை வெங்கடேஷ் வாங்கியதும் அதனை பயன்படுத்தி தான் அனிதாவை கொலை செய்ததும் தெரியவந்துள்ளது.

கைதான வெங்கடேஷிடம் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Topics

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

Entertainment News

Popular Categories